Thursday 2 July, 2009

காதல் கடிதம்


காதல் கடிதம்


காலத்தை அளவிடுத்தன நாட்குறிப்புகள்
அதனோடு என் வயதையும்
கணக்கெடுக்க நான்

தவறி விட்டேன்.

ஒரு நாள் தேவாலயத்தில்
இறைவனிடம்
வேண்டி
நான் நின்ற போது

ஒரு கணம் உன்னை
காண நேர்ந்தது.

எனக்காக நீ உதிர்த்தாற் போல்

அக்கணமே நான் உணர்ந்தேன்.

உனக்காகவே நான் பிறந்தாற் போல்-

என்னுள் ஒரு நினைப்பு.


காற்றி
ன் திசையெங்கும்
விண்ணுலக
தேவதைப்
போல் தாவிப்பறந்தேன்.

அக்கனம் முதல் என் உள்ளத்தில்

நட்சத்திரம் முளைத்தது போல்

மய்யல் கொண்டேன்.
காலச்சக்கரம் சுழன்று
என் முன்னே
வந்து நின்றது போல்
ஒரு நினைப்பு.


கடல் கலைக்கும் அலைப்போல்

என் மனமெங்கும் அலை வீச
காற்றில் அசைந்தன

கானகமே.

வெண்ணிறம் படர்ந்த
பனி வெய்த வீடு

காலைப்பொழுதின் தீர்க்கத்தை
உணர்ந்தேன் நான்,

அத்தகைய நாள் ஒன்றில்

மறை திறந்த பரிதியைப்போல்

உன் வீட்டாரும்
எனை
கேட்டு வந்தனர்.

அன்றைக்கே உனை காண
நான் துடித்தேன்.

வண்ண வண்ண கனவுகள் கூடி

என் கண்களில் நிறைந்தன.

நிலத்தின் நீர்க்குமிழிகளோ

என் நெஞ்சத்தில் ஊற்றெடுக்க,

உன் முகம் நான்
அறிந்திருக்க வில்லை
என்றாலும்
ஒரு கணமேதும் நான்
யோசிக்க வில்லை
உடன் சம்மதித்தேன்.

உள்ளங்கள் கரைந்தோட
ஒருமித்தோம்.
கடற்கரையெங்கும்
நம் காலடிகள்
அலைகளோடு
கலந்தோடினோம்.

கண் விழித்த போது

கனவென்று உணர்ந்தேன்.

அக்கனமே உயிர் துடித்தது

கண்கள் கலங்கின.

உன் நினைவுகளோடு
கரைந்தன
ஈரைந்து வருடங்கள்
.

என் வீட்டு நாட்காட்டியுடன்

நானும் கரைந்தேன்,
கலைந்தேன்.

தோட்டத்தில் பூத்திடும் மலர்கள்

மாலைகள் ஆவது எத்தகைய
இயல்போ
அதுப்போல
நீயும் நானும் கலந்திடும்
நாளும் குறித்திட ஆயிற்று.
பூக்களும் மலர்ந்தன

வேளை வந்நது

இடையில் நாகமென்ற
நட்சு
என்னை பற்றிய
உமிழ
நீயோ
மலர் அவழ்த்த காம்புப் போல்
என்னை
விடுத்தாய்.
புயலில் ஆட்கொண்ட படகுப் போல்

நான் திக்கற்று போனேன்.

கருமேக கலைய
அழுதிடும்
விம்மிடும்.
அதனோடு நானும் அழுது
கரைத்துகொண்டேன்.

நீ என்னை மறுத்திடாய்

முகம் பார்க்க வெறுத்திட்டாய்

என் உள்ளம் உனக்கானது

என்பதை மட்டும் ஏன்

நீ மறந்திட்டாய்?

ஒருமுறையேனும் என்
முகத்தை
பார்த்திட
உனக்கேன்
தோன்ற வில்லை.
உனக்கான விழி
உன்
முகத்திடன் உள்ளது

என்பதை நீ ஏன்

அறிந்திருக்க வில்லை.

உனக்கான இதயம்

உனக்காக வேறொரு இடத்தில்

ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உணராமல் இருந்தாய்?

உனக்கான சுவாசம்

உனக்காக மட்டும்

சுவாசித்து கொண்டிருக்கிறது

என்பதை ஏன் மறந்திட்டாய்?


என் அன்பே!
எனை மறுத்திடும் நீ

ஒரு முறையேனும்

என் முகத்தின் நேரே வந்து

சொல்லி மறுத்து விடு.
உன் திரு வாயினோடு
உன் முகம் கண்டு

நான் ஏற்று கொள்கிறேன்.




(நான் எழுதிகொண்டிருக்கும் நாவலின் முக்கிய பெண் பாத்திரம் எழுதும் காதல் கடிதம். இதை வாசிப்பவர்கள் அவசியம் தங்களது எதிர்வினையை தெரிவிக்கவும்)

3 comments:

தேவன் மாயம் said...

காற்றின் திசையெங்கும்
விண்ணுலக தேவதைப்
போல் தாவிப்பறந்தேன்.
அக்கனம் முதல் என் உள்ளத்தில்
நட்சத்திரம் முளைத்தது போல்
மய்யல் கொண்டேன்.
காலச்சக்கரம் சுழன்று
என் முன்னே வந்து நின்றது போல்
ஒரு நினைப்பு.
///
கவிஞரே!!
அசத்தீட்டீங்க!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

காதல் கடிதம் கவிதையாய் மனதை உருக்குகிறது.
//உனக்கான இதயம்
உனக்காக வேறொரு இடத்தில்
ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உணராமல் இருந்தாய்?
உனக்கான சுவாசம்
உனக்காக மட்டும்
சுவாசித்து கொண்டிருக்கிறது
என்பதை ஏன் மறந்திட்டாய்//

இந்த வரிகள் நன்றாக இருக்கிறது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Please take the word verfication from the comments.