Sunday 19 July, 2009

உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை


உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை-
க. செண்பகநாதன்


உலகமயமாதல் குறித்து விஷயத்தில் பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. உலகமயமாதல் என்றால் நாடுகளுக்கிடையே எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளித்து முதலீடு செய்யப்படும் முறைமை ஆகும். உலகமயமாதல் உடைப்படும் காலகட்டத்தை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு இது புதிதாக வந்த ஒன்று என்றாலும் இதன் ஆதி அந்தம் பல்வேறு முறைகளில் வேவ்வேறு நாடுகளில் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது. கடந்த 1944 ஆம் ஆண்டு இதன் போக்கு இருந்ததாக கண்டறியப்பட்டாலும் 1981 ஆம் ஆண்டில் தான் பொருளாதார நிபுணர்கள் உலகமயமாதல் என்ற சொல்லாடலை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக இதன் செயல்பாடு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது பொதுமை படுத்த முடியாது. இந்தியாவில் 1990களின் தொடக்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன் விளைவால் எஃகு, மருந்து பொருள், பெட்ரோலியம், ரசாயனம், ஜவுளி, சிமெண்ட், சில்லறை வணிகம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடு குவியத் தொடங்கியது. இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு. சுமார் 110 கோடி மக்களின் சந்தையை கருத்தில் கொண்டே முதலீடுகள் குவிந்தன. குறுகிய காலத்திற்குள்ளாகவே பெரும் முதலீடுகள் வந்து குவிந்தன. அத்தகையது நீடித்த வளர்ச்சியாக அமையவில்லை என்பது இப்போது நிரூபனம் ஆகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாதலால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்ளோடு போட்டிப் போட முடியாமல் பெரும் இழப்புகளை சந்தித்தன. உற்பத்தித் துறை, மருந்து, ரசாயனம், எஃகு போன்ற துறைகளில் ஏராளமானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. உலமயமாதல் இவ்வுலகத்திற்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்தியுள்ளது. வறுமை அதிகரித்தும், சமச்சீரற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு மக்களை ஆட்படுத்தியும், அநீதியை ஏற்படுத்தியும், காலகாலமாக கடைப்பிடித்து வந்த கலாச்சாரதிற்கு ஊறு விளைவித்தும், இன்னும் பல உலகலாவிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதலினால் (ஒரு நாட்டிற்குள்ளாகவே) வருமான ஏற்றத் தாழ்வுகள் பெரியளவில் நிகழ்ந்திருப்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள்(120 கோடி மக்கள்) நாள் ஒன்றுக்கு 1 டாலர்(அதாவது இந்திய ரூபாய்க்கு ரூ.50 ) மட்டுமே வருமானமாக பெற்று வருவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் சுமார் 83 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாரிப்பதாக அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எந்த கட்சியோ எந்த அமைப்பின் சார்பாகவோ எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அல்ல. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை. இப்போது உலக அளவில் கிடைக்கக் கூடிய ஆண்டு சராசரி வருமானத்தை பங்கிட்டுக் கொள்பவர்களின் விழுக்காட்டினை காண்போம்: ஒட்டுமொத்த மக்களில் பயன்பெறுவோரின் மொத்த வருவாயில் விழுக்காட்டளவில் - நிலை - விழுக்காட்டளவு 20% முதல் நிலை பணக்காரர்கள் - 82.7% 20% இரண்டாம் நிலை பணக்காரர்கள் - 11.7% 20% மத்திய தர மக்கள் - 2.3% 20% ஏழை மக்கள் - 1.4 20% மிகவும் ஏழைகள் - 1.2% இந்த கணக்கு வெறும் எண்களால் கொண்டது மட்டும் அல்ல. கோடான கோடி மக்களின் சதைத் துளி. அந்த சதைத் துளியைத் தான் பங்குப் போட்டுள்ளது இன்றைய உலகமயமாதல். உலக வங்கி மற்றும் அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கைகள் இதை துள்ளியமாக கொடுத்திருக்கின்றன. இந்த கணக்கை பார்க்கும் போது மற்றொன்றும் தெளிவாக புலப்படுகிறது. அது உலகில் உள்ள 120 கோடி பரம ஏழைகளில் 84 கோடி இந்தியர்கள். அதாவது உலக அளவில் 70 விழுக்காட்டுக்கு மேல், இந்தியா அளவில் 80 விழுக்காடு மக்கள் கால் வயிற்று சாப்பாட்டுக்கே வக்கற்றவர்களாக உள்ளனர். இன்னொன்றும் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க கொள்ள வேண்டும் உலக அளவில் பணம் படைத்தவர்களாக இந்திய பனியாக்கள் திகழ்கின்றனர். இதிலிருந்தே உலக அளவில் இந்தியாவில் தான் சுரண்டலுக்கு எஜமாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள 10 முதல் நிலை செல்வந்தர்களில் 4 பேர் இந்தியர்கள். இந்தியாவின் முதல் பத்து செல்வந்தர்கள். இந்திய பணக்கார்ர்கள் - இனம் - சொத்து மதிப்பு லட்சுமி மிட்டல் - ராஜஸ்தான் மார்வாரி(பனியா) - 160000 கோடி முக்கேஷ் அம்பானி - குஜராத்திய பனியா - 100000 கோடி அனில் அம்பானி - குஜராத்திய பனியா - 90000 கோடி அசிம் பிரேம்ஜி - முஸ்லீம் - 85000 கோடி குஷல் பால் சிங் - உத்தர பிரதேச ஜாட் - 50000 கோடி சுனில் பாரத் மிட்டல் - தந்தை மார்வாரி, தாய் ஷத்திரிய - 47500 கோடி குமாரமங்கலம் பிர்லா - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடி ருயா சகோதரர்கள் - ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) - 40000 கோடி ரமேஷ் சந்திரா - ஜெயின்(பனியா) - 32000 கோடி பல்லோன்ஜி மிஸ்டிரி - பார்சி - 28000 கோடி ஆதி கோத்ரேஜ் - பார்சி 20000 கோடி இவ்வாறாக 100 வது இடம் வரை வரிசைப்படுத்தினாலும் 90 சதவீத செல்வந்தர்கள் பனியா வகுப்பினராக தான் உள்ளனர். அதற்கென்று ஒரு புத்தகம் தான் வெளியிட வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை. திருடர்களுக்கெல்லாம் புத்தகம் போட முடியாது. இவர்கள் ஜாக்கிரதை என்று போஸ்டர் தான் அடித்து ஒட்ட முடியும். சமூகத்தில் இரு துருவங்களாக, எட்ட முடியாத தூரத்தில் இரு பிரிவினரின் பட்டிலையும் பார்த்திருப்பீர்கள். இது தான் உலகமயமாதலின் சாதனை. மனிதனை பணத்திற்காக பேதலிக்க அலைவிட்டுள்ளது உலகமயமாதல். இந்த உலகமயமாதலின் கட்டுப்படற்ற வர்த்தகம் தேவையில்லாத யூக வணிகத்தின் மீது பந்தையம் வைத்து விளையாடுகிறது. இன்றைய நிலையில் அது பரிதாபத்திற்கு உரிய நிலைய அடைந்துள்ளது என்பது தான் உண்மை. உலகமயமாதல் காலவதியாகும் நிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டினர்க்கே வேலை என்ற முழக்கத்தை உரக்க எழுப்பியுள்ளனர். இத்தகைய நிலையில் உலகமயமாதலின் நோக்கம் அடிப்பட்டு போகிறது. அது எந்த வித புரட்சியும் இன்றி தன்னாலேயே மடிந்து விட்டது. உலகமயமாதல் கொள்கையினால் நேர்ந்த விளைவுகள் குறித்து பார்ப்போம்: 1. நாட்டின் எல்லைகளை கடந்து உலகலாவிய சந்தையை ஏறபடுத்தியது. அதன் விளைவால் நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனைத்து விதமான பொருள்களும் முழுமையாக கிடைத்து வந்தன. 2. பெரும் நிறுவனங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், பிராந்தியங்களுக்கும் வணிக சந்தைகளுக்கும் தங்கு தடையின்றி ஏராளமான நிதிகள் கிடைக்கப் பெற்றன. 3. பொருள்களும் முதலீடுகளும் பரிமாற்றத்தின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் உலகலாவிய பொது சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. 4. பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல் துறையிலும் உலகமயமாதல் வியாபித்து, உலகலாவிய அரசாங்கமாக ஒற்றைத் தனைமை ஏற்படுத்தியது( இது தான் மிக முக்கியமானதும் மிக ஆபத்தானதும் கூட, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிகார மீறலை கண்டிருப்பீர்கள். அமெரிக்காவில் மட்டும் புஷ்ஷோ அல்லது பொருளாதார வீழ்ச்சியோ ஏற்பட்டிருக்காவிட்டால் படு பாதகமாக விளைவை உலகம் சந்திருக்க கூடும். 5. உலகில் உள்ள கடகோடிக்கும் தகவல்கள் சென்றடைந்துள்ளது(இதைத் தான் தகவல் தொழிற் நுட்ப புரட்சி என்று கூறுகின்றனர். அதனால் என்ன பயன் கிராம்பபுறங்களில் வாழ்வாதாரம் சிதைந்து நகரங்களை நோக்கி மக்கள் புலம் பெயர்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கிறது. இதனால் கடைக்கோடி என்பதில் பொருளற்று போய் விடுகிறது). 6. காலச்சாரத்தைப் பொருத்தவரையில் ஒரு பொது தன்மை உருவாகி, நிலம் சார்ந்த பண்பாடு மற்றும் காலச்சாரம் சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரபரிய உற்பத்தி முறை மற்றும் அதை சார்ந்த தொழில் முனைவோரின் வாழ்க்கை பெரியளவில் பாதித்திருக்கிறது. 7. சூழலியலைப் பொருத்தவரையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற பொருளாதரக் கொள்கையில் மூலம் தேவையற்ற போக்குவரத்து அதிகரித்து, நுகர் கலாச்சாரம் பெருகி, நச்சு விளைவிக்கும் அமைசங்களின் உற்பத்தியால் புவி வெப்பம் பெருமளவு அதிகரிந்துள்ளது. இந்த பிரச்சனையை தனியரு நாடு சமாளித்து விட முடியாது. புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் உலகமயமாதல் அவசியப்படுகிறது. 8. போக்குவரத்தை பொருத்தவரையில் ஐரோபிய கார்களின் மவுசு குறைந்து, சாலைகளில் அமெரிக்க வகை கார்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தொழிற் நுட்பம் அதிகரித்து, போக்குவரத்துக்கான நேரம் குறைந்து, பயணிக்கும் கால நேரம் வெகுவாக குறைந்துள்ளது(இவ்வாறாக கூறுபடுவது அவ்வளவு உண்மையல்ல, இதிலிருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தை அமெரிக்க முதலாளித்துவம் மிஞ்சி விட்டதை அறிந்து கொள்ளலாம்) 9. சர்வதேச அளவில் கலாச்சாரப் பரிமாற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.(இது பற்றியான நீண்ட ஆய்வு கட்டுரை-”உலகமயமாதலும் வெகுஜன கலாச்சாரமும்” அடுத்த இதழில் வரவுள்ளது). * இதனால் பன்முக கலாச்சாரம் என்ற பெயரில் பெரும் வணிகத்தன்மையோடு மேற்கத்திய இறக்குமதிகள் புகுந்துள்ளது. உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் SULM DOG MILLIONAIRE படத்தை கூறலாம், இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களையும், பிற நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட விருது, உலகில் அதிகமாக வாழும் இஸ்லாமியர்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டதாகும். * இத்தகைய கலாச்சார பரிவர்த்தையில் முக்கிய பங்கு வகிப்பது மேற்கத்திய கலாச்சாரமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். * பெருமளவிலான உல்லாச சுற்றுலா பயணம் அதிகரித்துள்ளது. அதன் மூலம் உலகலாவிய விபச்சாரம் முதன்மையடைந்துள்ளது. கடற்கரை உல்லாச விடுதிகள். பாலர் பாலியல், முதலியவைகள் அதிகரித்திருக்கிறது. இதில் முக்கிய பலிகடாவாகி இருப்பது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, பிரேசில், பிலிப்பென்ஸ் மற்றும் ஏனைய வறிய மற்றும் வளரும் நாடுகள். * இத்தகைய சுற்றுலா மையங்களாக கடற்கரையே அமைந்துள்ளதால் பாரம்பரிய மீனவர்களில் கிராமங்கள் அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் எழுந்து வருகின்றன. அதற்காக முதலில் மேற்கொள்ள படுவது தான் கடலோர சாலை அமைப்பு. * இத்தகைய உல்லாச சுற்றுலா பயணிகளின் இச்சைகளுக்கு விருந்தளிக்க உறுதுணையாக இருப்பது தகவல் தொழிற் நுட்பம். குறிப்பபாக ஆர்குட், பேஸ் புக், யூ டூப், போன்ற இணையத்தளங்கள் உல்லாசம் தேடி வரும் பயணிகளுக்கு அலைச்சல் இல்லாமல் ஆட்களை பிடித்து தர ஏதுவாக இருக்கின்றன. * கடலோர பீச் ரிசோட்கள் பெருக்கத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் பயன்பாடுகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். நான் கூற அவசியமில்ல். * இப்போது அதிகரித்து வரும் பேஷன் ஷோக்களையும் அறிந்து வைத்திருப்பீர்கள். மாடல்களை தேர்ந்தெடுக்க பெரும் முதாலாளிகளே. பரிசுகள் வழங்குவதும் அவர்களே. அதுவும் ஏதாவது உல்லாசத் தீவுகளில் தான் பரிசுகளை வழங்குவார்கள். இது குறித்தும் நான் விரிவாக எழுத அவசியம் இல்லை. உதாரணத்திற்கு கூற வேண்டுமேன்றால் மும்பையில் தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல் போது வெளி வராத பல தகவல்கள் உள்ளன. பெரும் தகை கொண்ட ஊடகங்கள் மெல்லிய சிறகுகளை விரித்து வல்லிய விஷயங்களை வெளியிட்டன. பெரும் மதிப்புக்குரிய பல பெரும் முதலாளிகளின் நல்லாதரவுக் கொண்டு அவர்கள் வலியை தன்னடத்தையுடன் வெளியிட்டன. இதில் எவரையும் குறை கூறுவதற்கில்லை. அங்கு நடந்த கொலைகளில் பல மாடல் அழகிகளுடன் கூடிய தொழில் அதிபர்களிளை பற்றிய செய்திகளை வெளியிடாமல் மரியாதை காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10. கடைசியாக தகவல் தொழிற் நுற்பம் மற்றும் உலகலாலிய சட்டமுறைமைப்பற்றி பார்ப்போம். * இணையத்தளத்துடனான இணையப்பட்ட உலக அளவிலான தகவல் தொழிற் நுற்பம். தகவல் பரிமாற்றம். அதற்கான உள் கட்டமைப்பு. குறிப்பாக செல்பேசி, கடல் வழி பைபர் இழை கேபிள், சேட்டிலைட் தொடர்பு ஆகியவைகளை கூறலாம். (இவை அனைத்துமே வணிகம் சார்ந்தது என்பது தான் முக்கியம்) * உலக பொதுமைக்கான காப்புரிமை சட்டம். அதன் கீழ் ஏழை நாடுகளை சுரண்டும் போக்கு அதிகரித்துள்ளது. இவையனைத்தும் கொண்டு பார்க்கும் போது உலகமயமாதலினால் பெரும் தீங்க நடந்தேறியுள்ளது. இப்படியிருக்க நமது மன்மோகன் சிங்கை என்ன சொல்வது நீங்களை கூறுங்கள். தரகர் தானே. இவைகளுக்கு கடைசி காலம் வரை உறுதுணையாக இருந்து விட்டு பதவித் துறந்த பசியை மாமா என்று தான் அழைக்க வேண்டும். உலகமயமாதல் என்ற போர்வையில் உலாகாவிய பெருமுதலாளிகள் அனைத்து மூளையிலும் கடை விரித்துள்ளனர். இதனால் உள்ளுர் தொழில்கள் மற்றும் வறியப் பிரிவினர் எழுப்பும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஆக பெரும் சக்தியாக தலைகர்த்த அமெரிக்கா முனைந்துள்ளது. இனி உரிமைகள் குறித்து பேச முடியாது. அதை பெரும் ஊடகங்கள் வெளிப்படுத்த முடியாது. அப்படி செய்தால் அவர்களுக்கான விளம்பரம் உட்பட மற்ற உதவிகளும் நிறுத்தப்படும். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும். தீவிரவாத முத்திரை குத்தப்படும். பெருமுதலாளிகளால் சிறு சிறு ரவுடி கும்பல்கள் வளர்த்து விடப்படுவார்கள். என் ஜி ஓக்கள் மூலம் நேரக்கரம் நீட்டுவார்கள். அற்ப இலவசங்கள் வழங்கப்படும். மக்களுக்கு அற்ப உல்லாசங்கள், மூளையை மழுங்கச் செய்யும் கலியாட்டங்கள் நடத்தப்படும். ஊடாகங்கள் மூலமாக முக்கியமான பிரச்சனைகளை மறைத்து உப்பு சப்பு இல்லாத விஷயங்கள் பெரிதாக வெளிகாட்டப்படும். இன்று தமிழகத்தில் மிக பெரிய கார்பிரேட் சிந்தனையாளராக மூத்திர கலைஞர்( எவ்வளவு முயன்றும் அச்சு பிழை திருத்த முடியாதற்கு வருந்துகிறேன்) மூத்த கலைஞர் திகழ்கிறார். அவரது கட்சி கார்பிரேட் கழகமாக மாறியுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர்களாக ஸ்டாலின், தயாநிதி, அழகிரி, கனிமொழி, தயாளு, ராசாத்தி மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். கழக கார்ப்பிரேட் உடன்பிறப்புகள் அங்காங்க பகுதி மேலாளர்களாக இருப்பார்கள். கட்சி தொண்டர்கள் கம்பெனி வளர்ச்சிக்காகவும், வருவாய்க்காவும் பாடுபடுவார்கள். சம்பளமாக தேர்தலின் போது பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் வழங்கப்படும். கம்பனி சுட்டிக்காட்டும் ஆட்களை அடித்து துவேஷம் செய்பவர்களுக்கு கூடுதல் போனஸாக பதவிகள் வழங்கப்படும். இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. உங்களுக்கு இதை கொண்டு இலங்கையை உற்று நோக்குங்கள் புலப்படும். விடுதலை போராட்டம் நசுக்கப்படுவதும். இந்திய வட்டார அடியாளாக ராஜபட்சே உருபெருவதும் நீங்கள் அறிவீர்கள். உலக முழுவதும் இது தான் நடைப்பெறுகிறது. இது தான் கார்ப்பிரேட் கலாச்சாரம். இந்தியாவில் இத்தகைய விஷயத்தில் முதன்மையாக திகழ்வது மேற்கு வங்காளம் என்பது மிகவும் உன்னதம். டாடாவுக்காக அடியாளாக மாறிய புத்த தேவ், அங்கு நடந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள். இது தான் உலகமயமாதல், இந்த சிந்தாந்ததை தான் மன்மோகன் பயின்று மாக அறிஞரானார். பிறகு பார் பேற்றும் உலக வங்கிக்கு போனார்.

No comments: