Saturday 4 July, 2009

உலக பொருளாதார வீழ்ச்சி


உலக பொருளாதார வீழ்ச்சி (1)
-க . செண்பகநாதன் -
இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(Laissez faire) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது.

- தொடரும் -

No comments: