Friday 25 November, 2011

கூடங்குளம்: மரண கூடாரம்



கூடங்குளம்: மரண கூடாரம்

மேல நாடுகள் சப்பி துப்பிய விஷயமே இன்று வரப்பிரசாதமாக இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. பணிப்போர் காலக்கட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷிய அணிகள் ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்துவதற்காக அணு ஆயுதங்களை தயாரித்து குவித்தன. அதில் அவைகள் மறைமுகமாக மின்சாரத்திற்கென்று கூறி அணு ஆயுதங்களை தயாரித்தன. அத்தகைய போட்டி நிலை இப்போது இல்லை. ஆகையால் மேலை நாடுகள் படிபடியாக தங்களை அணுமின் நிலையங்களை மூடி வருகின்றன. அதனால் அவைகளிடம் உள்ள தொழில் நுட்பங்களையும், மூலப்பொருளையும் வணிகம் செய்ய சந்தை தேவை. அப்படியான சப்பிய மாங்கொட்டையை சுவைக்க சப்பிய பழக்கப்பட்ட இந்தியா அரசியல்வாதிகளிடம் தள்ளிவிடுகிறார்கள். மேலை நாடுகளில் முன்பிருந்தது போல் மக்கள் குருட்டுத்தனமாக போர் வெறியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. அவ்வாறாக செயல்படும் ஆட்சியாளர்களையும் விரும்புவதில்லை. அமைதியை நாடும் மக்கள் அணுசக்திக்கு எதிராகவே உள்ளனர். ஆகையால் ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்துகிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் புதிய எதிரிகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பாகிஸ்தானை ஒரு ராட்சகனை சித்தரித்தும், சீனாவை ஆக்கிரமிப்பாளர்கள் போல் வரைந்தும் மக்கள் முக்கிய வாழ்வில் பிரச்சனைகளை உணராதவாறு தங்களது அரசியல் நிகழ்வுகள் அரங்கேற்றி வருகிறார்கள்.
குறிப்பாக இந்தியா தனது அண்டை நாடுகளை மறைமுகமாப பலவீனப்படுத்தி வருகிறது. அவ்வாறாக பலவீனப்படுவதென் மூலம் தங்களது எஜமானர்களான கார்பெரட் சக்திகளை கொழுக்க வைக்கவும் அவசியமாகபடுவது அணுசக்தி. இத்தகையதற்கு அரசு மக்களிடம் மின் பற்றக்குறை என்ற தேவையை முன் வைத்து மின் உற்பத்தி என்ற பேரில் அணு ஆயுதங்களின் உற்பத்திக்காகவும், சர்வதேச அணு வணிகர்களின் நலனுக்காவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணுசக்தி குறித்து இந்திய அரசாங்கம் அக்கறை காட்டுவதற்கு உள்ளீடாக அமைந்திருப்பது அணு அரசியல். அணு குறித்த தகவல்களை இந்திய மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே வெளிப்படையான தன்மையை கொண்டிருப்பதில்லை. குறிப்பாக கூறவேண்டுமானால் உலகில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் குறித்து முழுமையான தகவல்களை எந்த அரசும் வெளியிடுவதில்லை. பணி போருக்கு பிந்திய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் இந்தியா தெற்காசிய வட்டாரத்தில் தனது வல்லாதிக்கத்தை பதிக்க துடித்து கொண்டிருக்கிறது. அத்தகையது நல்லது தானே, நம் நாடு உலக அரங்கில் மேலாதிக்க செலுத்த முனைவது நல்லது தானே என சாதராண வெகுஜன மனபோக்கில் கருத நேரலாம். அவ்வாறாக இல்லை என்பது தான் உண்மை.
உலகமயம் காலாவதியாகிக்கொண்டிருக்கும் நிலையில் சீனா’வும், இந்தியா’வும் முதன்மை பெறும் என்ற வாதம் முன் வைத்து வருகிறார்கள். அதற்கு எத்தகைய சாத்தியம் சற்றும் இல்லை. இவ்வாறாக கூற செல்கிறார் ஆட்சியாளர்களின் எஜமானர்கள். ஏனைய நாடுகள் போல் இந்தியா இல்லை. மற்ற நாடுகளில் பரந்தபட்ட வளர்ச்சி என்பது மக்களிடம் உள்ளது. இங்கு பத்து விழுக்காடு மக்களுக்கான ஏற்பாட்டில், இங்கிருக்கும் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்கவே முயல்கிறார்கள். வளர்ச்சிக்கு அணு உலை அவசியம் என்று பேசப்படுகிறது. அது முற்றிலும் அபத்தமானது. அந்நிய முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரவே பண்ணாட்டு வர்த்தகத்தின் முக்கிய அங்கம் தான் அணு உலை.
அரசு அதிகாரம் என்பது எப்போதும் மக்களுக்கு எதிரானது தான். அந்த அரசு எனப்படுவது அதிகாரம் செலுத்ததும் மையமாக இருக்கும் போது அது தனது அதிகார மையத்தை தக்க வைப்பதில் அக்கறை கொள்ளும். அதிகாரமற்ற மக்களுக்கும் அதற்கும் சம்பந்ததம் இல்லை, அதிகார செலுத்துவதற்கு மக்கள் அவசியம். அதற்காகவே தேசியவாதம் என்ற தேசப்பற்று, வளர்ச்சி, ராணுவ தகைமை, வழிப்பாட்டு அரசியல், ஒழுக்க அரசியல், சட்டத்திற்கு உட்படுதல், போன்ற விஷயங்கள் முன்னிறுத்தப்படும். மற்றொரு முக்கியமான விஷயம் தேச பாதுக்காப்பு என்ற முன்னிருத்துவது. அதில் ராணுவம் என்ற இயந்திரத்தை எவ்வாறு அரசு பயன்படுத்துகிறது என்பதில் அரசு அதிகாரத்தின் தந்திரம் மிகவும் சூட்சுமம் கொள்கிறது. எல்லை வரைக்கோட்டிற்கு உட்ப்பட்ட நிலப்பிரதேசத்த்தின் காவலாளிகளத் தவிர ராணுவம் என்பது மக்களை பாதுக்காப்பதற்கானது அல்ல. ஏனெனில் அந்த நிலப்பரதேசத்தில் உள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அவர்களின் எஜமானர்களான பெருமுதலாளிகள் வாழ்கிறார்கள். அவர்களுக்கானது தான் ராணுவம். அது குறித்து ஹாவர்ட் ஸின் கூறும் போது: ‘ராணுவ வீரர்கள் இறந்துபோவது தமது நாட்டிற்காக அல்ல. தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களுன் நலன்களுக்காவும் போரினால் லாபம்பெறும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தான்,’ என்கிறார்.
அணு மின்சார உலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று வாசிப்பவர்கள் உணரக்கூடும். பெரும்பாலும் உலக முழுவதும் அணு மின்சார உற்பத்தி என்ற போர்வையில் மறைமுகமாக அணு ஆயுதங்களுக்காகவே முதன்மையாக நிறுவப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அணு ஆதரவு அறிவு ஜீவிகள் எடுத்து வைக்கும் வாதம் நான் அணு ஆயுதங்களை நிறம்ப உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே. அப்துல் கலாமும் அதை தான் சொல்கிறார். இந்தியாவை சுற்றி பத்தாயிலம் அணுகுண்டுகள் இருக்கிறது. நாம் கைக்கட்டி தபஸ் செய்ய முடியுமா? என்று கேட்கிறார்.
அப்படியென்றால் ஒன்று தெளிவாகிறது, அணுசக்தி என் பேரில் அணு ஆயுதங்கள் ஒழிந்துள்ளது என்று. இதில கூட அவரது நிலைப்பாடு தவரே. உலக வல்லாதிக்க நாடுகள் அவ்வாறான அணு ஆயுத வெறிபிடித்த மனநிலை என்பது முன்பிருந்தது. ஆனால் மக்களிடம் ஏற்பட்ட விழுப்புணர்ச்சியினால் அவைகள் தங்களிடம் இருக்கும் அணு அயுங்களை அழிக்க தொடங்கி விட்டன. சென்ற மாதம் கூட அமெரிக்க தன்னிடமிருந்த அபயாகரமான அணு அயுதங்களை அழித்தது. அவ்வாறாக இந்தியா மட்டும் புதிய அணு ஆயுத உற்பத்தி சித்தாந்தத்திற்கு தன்னை தயார்ப்பபடுத்திய மர்மம் என்ன?
அத்தையதற்கு காரணம் யுரேணிய வணிகம். பண்ணாட்டு கம்பெனிகளுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியே. பிறகு கலாம்(2020) கூறும் மற்றொரு விஷயம் யுரேணியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்துவது குறித்தது. அவர் கூறும் காரணம் பாதுகாப்பானது, அதிக மின் உற்பத்தி சாத்திக்கூறுகளையுடையது. இதிலிருந்தே தெரிகிறது அவருக்கு அணு விஞ்ஞானம் குறித்து ஏதும் தெரிய வில்லை என்பது. தோரியத்தை தன்னிச்சையாக அணு உலைகளில் பயன்படுத்த முடியாது. யுரேணியம் மற்றும் யுரேணியம்-233 கொண்டே உபயோகப்பட்டுத்த முடியும். யுரேணியத்தித்தைக் காட்டிலும் ஆபத்தானதும்கூட. இது குறித்து இந்திய அணுசக்தி கழகம் 1970-ஆம் ஆண்டில் திட்டங்கள் வகுத்து அடுத்த பதினைந்து ஆண்டுகளில் தோரிய உலைகளை நிறுவுவது என்று தீர்மானித்தத்து. ஆனால் நாற்பது ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் அவ்வாறாக நிகழ்த்தப்பட வில்லை. அதற்கு பொருந்தாமையே காரணம். அதற்கான தொழில் நூட்பமும் உகந்ததாக இல்லை. இவையெல்லாம் அணு விஞ்ஞானம் சார்ந்த விஷயம். நாம் இந்த அணு உலை அரசியல் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதனையும், ஆபத்து குறித்தும் பார்ப்போம்.
முன்பு ஒரு முறை உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான், இந்தியாவில் காஷ்மீரும், தமிழ் நாடும் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன என்றார். எப்போதும் டில்லி, தமிழகத்தை சந்தேகக் கண்ணுடன் பார்த்து வருகிறது. இந்திய கலாச்சாரத்திலிருந்து வேறுப்பட்டவை என்ற விதத்தில் வடக்கத்திய அறிவு ஜீவிகள் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள். இவர்கள் இந்திய கலாச்சாரத்தோடு இணைய நினைத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது உண்மை. தமிழ் பண்பாட்டோடு ஒட்டியிருக்கும் மலையாளிகளையும், கன்னடத்தையும் சூழ்ச்சியால் முன்பே பிரித்தாண்டு விட்டார்கள். குறிப்பாக கூறவேண்டுமானால் கன்னடம் மற்றும் மலையாளம் தொன்றுத்தொட்டு ஒன்றினைந்த கலாச்சார, மொழி குடும்பத்தை கொண்டவைகள். மொழி அமைப்பும், மொழி கூறும் அடிப்படையானவை. அத்தகையதிலில் பிணக்கை செயற்கையாக ஏற்படுத்தி அவர்கள் முதல் வெற்றியை பெற்றனர். காஷ்மீரை பொறுத்தவரையில் அங்கு ஒடுக்குதல் மூலம் காஷ்மீரிகளை டில்லி மண்டியிட செய்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தங்கள் கட்டுப்பாட்டில், ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர காரணமேதும் இல்லை. ஆகையால் தமிழகத்தின் இருமுனைகளிலும் அணுமின் நிலையங்கள் அமைத்து, அதறன் பொருட்டில் ராணுவ அச்சுறுத்தலை மேற்கொள்ள இந்திய அரசு முனைகிறது. அதற்காகவே ஈழத்ததை இந்திய ஒடுக்கியது. அதே போல் இதுவரை பாகிஸ்தான் இந்தியா’விற்று அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி தனது இந்திய தேசியத்தை காத்து வந்தத்து. இப்போது சீனா’வை காட்டி பயமுறுத்துகிறது. சீனா நூற்று கணக்கான அணு உலைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறது. அதுவும் பொய், தான் திட்டமிட்டிருந்த அணு உலைகளை சீனா முழுமையாக கை விட்டிருக்கிறது. இந்நிலையில் ஏன் இந்திய ஆட்சியாளர்கள் இத்தகைய பித்தாலட்டங்களை மேற்கொள்கிறார்கள் என்பது தான் இதில் தொக்கி நிற்கும் அரசியலும், வணிகமும்.
சமீபக்காலமாக மின்தேவை அதிகரிக்க என்ன காரணம்? அதுவும் பலமடங்கு அதிகமானதற்கு காரணம்? மக்கள் பயப்படுத்தி முனைந்து விட்டார்களா? அப்படியன்றும் இல்லை. இன்றைய விலை வாசி நிலையில் உணவுப்பொருகளை வாங்கவே திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் உல்லாசமாக மின்சாரத்தில் திளைக்க வழியில்லை. அதிகப்பட்சம் அவர்களது உல்லாசம் என்பது தொலைக்காட்சி காண்பதுதான். அப்போதுகூடு மின் விளக்குகளை அனைத்து விட்டுத்தான் பார்க்கிறார்கள்.
அப்படியிருக்க மக்களுக்கான மின்சாரத்தை கபளீகரம் செய்வது யார்? கார்ப்ரேட், பண்ணாட்டு கம்பெனிகள்தான் கபளீகரம் செய்கின்றன. சரி, அப்படி அந்த கம்பெனிகளால் என்ன பயன்? ஒரு கார் தொழிற்சாலையை அமைக்க மேற்கு வங்கத்தில் எத்தகைய எதிர்ப்பு? அங்கு அந்நிறுவனத்தால் தொழிற்சாலையை அமைக்க முடிந்ததா? கேரளத்தில் ஏதாவது ஒரு தொழிற்சாலை அமைக்க முடிகிறதா? இல்லையே! அப்படி எதையும் அணுமதிக்காத கேரளத்து மக்கள் தாழ்ந்தா போயிற்றார்கள்? இந்தியாவிலேயே மனித வள மேம்ப்பட்டு சிறந்து வாழ்நிலையில் உள்ளார்கள். எச். டி. ஐ. குறிப்பேட்டில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளனர். சமச்சீரான வளர்ச்சியிலும், கல்வியிலும் நாட்டிலேயே முதன்மையான இடத்தில் உள்ளனர். தமிழகத்தில் பல பண்ணாட்டு கம்பெனிகள் நிறைந்திருக்கும் நிலையில் இலவச அரிசியை நம்பி வாழ வேண்டிய அவசியம் என்ன. எங்கும் தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத்தில் செல்வம் கொழிக்க வேண்டாமா?
ஆகையால் வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பதுதான் கேள்வி?
மேம்ப்பட்ட சாலைகள் யாருக்காக போடப்படுகின்றன? முக்கிய வழித்தடங்களில் போடப்பட்டிருக்கும் சாலைகள் பண்ணாட்டு கம்பெனிகளுக்கானது. நீங்கள் செல்லும் போது பணம் கொடுக்க வேண்டும். இதைப்போன்ற சாலைகளில் பத்தில் ஒரு பங்கு கிராமத்திற்கோ,அல்லது ஏனைய உட்பகுதிகளுக்கோ கிடைப்பதுண்டா?. பிறகு தமிழகத்தை நகரமயக்கிறது. கிராமம் என்றால் ஒரு கட்டமைப்பு இருக்கும். அதை உடைப்பது. அதன் மூலம் மக்களது உறுதிப்பாட்டை குலைப்பது. மக்களின் ஆதாரமாக உணவு உற்பத்தி மற்றும் ஏனைய உள்ளூர் தொழில்களை அழிப்பது. அதன் மூலம் அரசாங்கத்திடம் நாடி வரச்செய்வது. அவ்வாறாக தங்கள் பாரம்பரிய தொழில்களை கை விட்ட மக்களை பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கூலிகளாக மாற்றுவது. அது தான் கடற்கரை பகுதிகளில் நடக்கிறது. மீனவர்கள் அழிக்கப்படுவதை அரசு கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களை கைவிட்டுவார்கள் என்று அரசு எண்ணுகிறது.
அவ்வாறாகத் தான் கலாமும்(2020) கூறுகிறார். மக்கள் தங்களது வாழ்வாதரங்களை தியாகம் செய்தால் 200 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் என்கிறார். தமிழகத்தின் மற்ற பகுதி மீனவல்களை விட விழுப்புணர்வும், சற்று வளமையும் கொண்டுள்ள கூடங்குள மக்களை உளவியல் ரீதியாக பாழ்ப்படுத்தவே இந்த அணு உலை. இவ்வாறாகத்தான் தமிழகத்தின் ஆதாரப்பகுதிகள் அழிக்கப்பட்டன. அதற்காக ஏவப்பட்ட கடைசி அம்பான கலாம் 2020 கூறும் கூற்று என்னவென்றால், அப்பகுதியில் தொழிற்சாலை: அப்படியன்றும் அப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பின்றி அல்லல் பட வில்லையே. பிறகு நான்கு வழிச்சாலை: அது எதற்கு? அங்கென்ன போக்குவரத்து நேரிசலா? பிறகு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை. அதற்கு அவசியம் தான். ஒரு வேளை அணு உலை அமைக்கப்பட்டால் 500 மட்டுமல்ல 50000 படுக்கைகள்கூட அவசியப்படும். இப்போது புரிகிறாதா யார் இந்த கலாம் என்று?
மன்மோகன் சிங் போல இவரும் கார்பெரட் எஜண்ட் என்பது தெளிவாகிறதா?. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தை கார்பெரட் மயமாக்க என்ன அவசியம். இது தான் முக்கியமானது. ஏனெனில் தமிழகம் பிரச்சனை இல்லாத மாநிலம். அது பெருமுதலிகளுக்கு தங்களது முதலீடு பத்திரமாக இருக்குமென நம்பிக்கை. பிறகு ஆட்சியாளர்கள். தமிழகத்து ஆட்சியாளர்கள்(இருவருமே) பேராசை பிடித்த கார்பெரட் அடிவருடிகள். அடுத்தாக நில அமைப்பு, வளம், பிறகு வேலையாட்கள். அதுவும் நுட்பமான பணியாளர்கள். பிறகு பல்லாண்டு காலமாக தமிழர்கள் அடங்கி வாழ கற்றுகொண்டதன் விளைவு. பிறகு போக்குவரத்து வசதி கடல் மற்றும் சாலை. பிறகு பாதுகாப்பான பகுதி. இவை அனைத்தும் ஒருங்கே கிடைப்பதால் மக்களை பலிகடாவாக ஆக்க முனைந்திருக்கின்றனர்.
மற்ற மாநிலங்கள் தங்களது வளத்தையும், நிலத்தையும் பாதுகாத்து வருகையில் தமிழகத்தை உயிரற்ற காங்கிரட் தலைகளாக பூமியை மாற்றி விடுவதன் மூலம் இனி வரும் காலத்தில் தங்களது உணவு மற்றும் அடிப்படை வாழ்வாதரங்களுக்கு திண்டாடும் நிலை ஏற்படும். நெற்களஞ்சியமாக திகழ்ந்த செங்கள்பட்டு-காஞ்புர மாவட்டத்தின் நிலை என்ன? இன்று வெறும் காங்கிரட் காடுகள் தானே! நிலப்பரப்பு குறைந்தும். மக்கள் தொகை மிகுந்த அடர்த்தியும் கொண்ட தமிழகத்தில் இம்மாதிரியான அணு உலைகளை அமைக்க எப்படி அரசுகள் துணிந்தன என்பதை எண்ணும் போது பேரதிச்சயாக உள்ளது.
கலாம் மற்றொரு விஷயத்தை குறிப்பிடுகிறார், கப்பல் விபத்து ஏற்பட வில்லையா? விமானம் விபத்து ஏற்பட வில்லை? பேருந்து விபத்து ஏற்பட வில்லை? என்று. அணு விபத்தால் பாதிப்பு பற்றி அவர் அறிந்திருக்கிறரா? அடிப்படை அறிவு உள்ள எவரும் இப்படி பேசமாட்டார்கள். அணு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது அளவிட முடியாது. பல்லாண்டு காலத்திற்கு பாதிக்கக்கூடியவை. ஒரே நாளில் பல்லாயிரம் உயிரிழப்பு ஏற்படாது என்றாலும் அதன் விளைவுகளால் பல ஆண்டுகள் நீடித்து பலியாக்கும் சக்தி கொண்டது. உதாரணத்திற்கு செர்போபெல். அந்த அணு விபத்தில் விளைவு குறித்து பிறகு பார்ப்போம்.
இவ்வாறாக கூடங்குளம் அணு உலையை தொடங்கும் முயற்சியை இந்திய அரசு மும்முரமாகி கொண்டிருக்கும் வேளையில் தான் ஜெர்மனி தனது அனைத்து அணு உலைகளையும் 2020 ஆண்டுக்குள்ளாக முடப்போவதாக அறித்துள்ளதை அப்துல் கலாம் என்ற ராகெட் வடிவமைப்பு பொறியாளர், அவரை முன்னாள் ஜனாதிபதி என்று கூற எனக்கு மனமில்லை. அவர்களிடம் உள்ள விஷயங்களை கொண்டும், மக்களுக்கு ஆற்றும் பணிகளை கொண்டும் சிலர் ஞாபகம் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் கலாம் மீது அத்தகைய எந்த வசீகரமில்லாமல் வெறும் எண், அதாவது 2020 என்ற எண் கொண்டே அவரை நினைவில் கொள்ள செய்கிறது. ஏனெனில் ஜனங்களில் நன்மைக்காக இருப்பவர் மட்டுமே ஜனாதிபது. வல்லரசு கனவுடன் மக்களை தியாகம் செய்ய தூண்டும் ஒரு மனிதரை ‘மௌன ஹட்லர்’ ராகவே பார்க்க முடியும். ஜெர்மனி நாட்டில் கிடைக்கப்பெற்ற யுரேணியம் தீர்ந்து போனதால் அணு உலைகளை மூடுதல் அறிவிப்பை விடுத்ததாக கூறுகிறார். அது முற்றிலுமாக பொய். அந்நாட்டு மக்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்றே அம்முடிவை எடுத்ததாக ஜெர்மனிய அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாது 1980- ல் நிறுவப்பட்ட அணு உலைகளின் செயல்பாடுகளை உடனே நிறுத்த ஆணையிட்டிருக்கிறது. கலாமின் கூற்றுபடி எடுத்துகொண்டாலும் யுரேணியம் கிடைக்கபெற்ற நாடே தனது அணு உலையை நிறுத்த போவதாக அறிவிக்க, யுரேணியம் சிறிதளவுகூட கிடைக்கப்பெறாத இந்தியா. அதை பெற மற்ற நாடுகளிடம் மண்டியிடும் இந்தியா இவ்வாறாக அணு உலைகளை நிறுவ அவசியம் என்ன?.
அதே போல் சுவிட்சர்லாந்தும், ஆஸ்டிரியா, இத்தாலி போன்ற நாடுகளும் அணு உலை எதிர்ப்பு நிலையை எடுத்து மூட திட்டமிட்டிருக்கின்றன. அதே போல் அதிக அணு உலைகளை வைத்திருக்கும் பிரான்ஸ், தனது மொத்த மின்சார உற்பத்தியில் 78 விழுக்காட்டினை அந்நாடு அணுவின் உலையில் மூலம் உற்பத்தி செய்யும் அதே வேளையில் 18 விழுக்காட்டினை அண்டை நாடுகளுக்கு விநியோகமும் செய்கிறது. அந்நாடு கூட அணு உலைகளை கை விட முனைந்துள்ளது. எனெனில் அணு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது மிகப்பெரியது. அதற்கு உதாரணம் செர்னோஃபெல்.
சோவியத் ரஷியாவில் உக்ரேன் மாநிலத்தில் உள்ள செர்னோஃபெல் என்ற இடத்தில் நிறுப்பட்டிருந்த அணு உலைகளில் ஒன்று வெடித்து சிதறுகிறது. அதன் விளைவால் ஏறபட்ட கதிர் வீச்சு ஹிரோஷிமா மற்றும் நாகஸாகி’யில் வீசப்பட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர் வீச்சைக்காட்டிலும் 100 மடங்கு அதிகமானது. சுமார் 1 லட்சத்தி 55 ஆயிரம் கி. மீ. பரப்பளவுக்கு அதன் கதிர் வீச்சு இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பாதிப்பு ரஷியா, உக்ரேன் மற்றும் பெல்லாரஸ் நாடுகளில் இருபத்திதைந்து ஆண்டுகளுக்கு பிறகும்கூட இன்றளவிலும் இருப்பதாக குறிபிடும் வேளையில் சுமார் 5000 நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இழப்பிடு மாதமாதம் வழங்கபட்டு வருகிறது. உயிரிழப்பு பொருத்தவரையில் அதன் விளைவாக 2 லட்சம் மக்கள் கதிர் வீச்சால் துர்மரணமடைந்தனர். இந்த தகவலை 1996-ஆம் ஆண்டு கிரின் பீஸ் அமைப்பு வெளியிடுகிறது. மற்றொரு கணக்கெடுப்பு 9.85 லட்சம் மக்கள் 1986 முதல் 2004 வரை புற்று நோயினால் மரணமடைந்ததாக 2004-ல் வழங்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
கணக்கிலடங்காதோர் ஊணமுற்றும், விபத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகள் கருவிலேயே சிதைவுற்றிருப்பது இதை விட பன்மடங்கு என தெரிவிக்கிறது. விகார உருவத்துடன் பிறந்திருப்பதை ஆதாரபூர்வமாக தெரிவிக்கிறது. அதன் கதிர் வீச்சு ஐரோப்பா முழுவதும் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் வேளையில் விபத்தின் போது நீருற்றி அனைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஒரு எலிகாப்டர் கூட கதிர் வீச்சுக்களு தாக்குண்டு விழுந்து நொருங்கிய காட்சி ஆதாரத்துடன் உள்ளது.
இவைகளை விட முக்கியமான விஷயம் செர்னோஃபெல் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரியின் நிலை. விபத்து குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விஞ்ஞானியான வெலாரி லெகஸோவா செர்னோஃபெல் விபத்தின் இரண்டாம் அண்டு நினைவு நாளில் தற்கொலை செய்துகொள்கிறார். இரண்டு வருடம் கழித்து விபத்து நடந்த நாளான 26 ஆம் தேதிக்கு மறுநாள் ஏப்ரல்27, 1988-ல் தனது அடுக்ககத்தில் தூக்கில் தொங்கினார். உண்மையை கண்டறிந்த அவரை அப்போதை அரசு அந்நிலைக்கு அவரை தள்ளியது.
இவ்வாறான பீதியூட்டும் தகவலுக்குப்பின்னும் உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் அணுயுலைகள் குறித்து தீர்க்கம்மான முடிவினை எடுக்காதிருந்ததை கண்டு அதிர்ச்சியளிக்கிறது. அவ்வகையில் பார்க்கும் போது அணு தொழிற் நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் எத்தகைய செல்வாக்கு செலுபவைகளாக இருக்கும் என்பது வளங்குகிறது. பிறகு இந்திய ஆட்சியாளர்கள் கூறும் மற்றொரு பொய், சீனா நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளை நிறுவ திட்டமிட்டிருப்பதாக கூறும் கூற்று. அதிலும் உண்மையல்ல. இருபத்தைந்து அணு உலைகளை அவர்கள் திட்டமிட்டது உண்மைத்தான், ஆனால் இவ்வருடம் மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அந்நாட்டு அரசு அமைச்சரவையை கூட்டி புதிதாக ஒப்புதல் அளித்த அனைத்து அணு உலைகளின் ஒப்புதலை ஒட்டுமெத்தமாக ரத்து செய்தது.
இவ்வாறாக மற்ற நாடுகளை சுட்டிக்காட்டி பழிப்போடுவதை இந்திய அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு மக்களிடம் விரோத மனநிலை விதைப்பது என்பது முற்றிலும் வஞ்சகமானது. நிச்சயம் கூடங்குளம் என்பது தமிழ்நாட்டிற்கான சபக்கேடு. சாதாரமான தண்ணீர் ஆவியாக 100 டிகிரி என்ற நிலையில் அணுவின் மூலம் உண்டாகும் வெப்பம் என்பது 2700 டிகிரி இத்தகைய உயரிய வெப்பத்தால் எந்த வித புற அசம்பாவிதம் இன்றி தானாகவே செர்னோஃபல்’லில் நடந்த போலொரு விபத்து நேரக்கூடும். அத்தகைய நிலை ஏற்பட்டால் விளைவு தமிழ்நாட்டையை விழுங்க்ககூடும். சுமார் 9000 மெகா வாட் தயாரிக்கும் திறன் என்பது அதிக அணு எரிப்பொருள் உபயோகத்திற்கு உட்படுவது. கல்பாக்கம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அணுயுலைகள் வெறும் 220 மெகா வாட் உற்பத்தி செய்யும் வேளையில் இத்தகைய பெரிய உற்பத்தியில் அதற்கேற்ப விளைவு இருக்கும் என்பது தின்னம். செர்னோபெல் மற்றும் ஃபெக்கிஷிமா விபத்துகளுக்கு அலட்சியமே காரணம் என்றும், தாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம் என்று கூறும் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி, நகராட்சி குப்பைகளையே பராமரிக்க வக்கற்ற உங்களால் எப்படி மேம்பட்ட நுட்பம் வாய்ந்த அவர்களை விட பராமரிக்க முடியும்?.
இவ்வாறாக இருக்க மனிதகுலத்திற்கு எதிராக பன்னாட்டு கம்பெனிக்காவும், பெரும் நிறுவனங்களுக்காகவும் தொடங்க முனைந்து கொண்டிருக்கும் கூடங்குளம், செர்னோபெல் போல் 1 லட்சத்தி 55 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிக்கும் மரண கூடாரமாக திகழப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இப்படியான பயங்கரத்தை எந்த மாநிலமும் இடமளிக்காது. அகையால் திட்டமிட்டிருக்கும் ஏனைய அணுயுலையையும் இந்திய அரசு நிறுவாது. ஏற்கனவே கேரளாவால் விரட்ட அணுயுலை தான் இது. கேரளா’வின் தேவைக்காகவே தொடங்கப்பட்ட கூடங்களத்தில் உற்பத்தி செய்ய எத்தனிக்கும் மின்சாரத்தின் பாதியளவை அம்மாநிலத்திற்கு வழங்கவும், தியாகம் செய்யும் தமிழகத்திற்கு பாதியுமாக அரசு நிவாணமளிக்க திட்டமிடுகிறது. அதுவும் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுக்காகவே!
இப்போது மேற்கு வங்கமும் அணுமதிக்க மறுத்திருக்கிறது. அதே போல் எந்த மாநிலமும் இடமளிக்காது. தமிழகத்தை விட இருமடங்கு பரப்பளவில் அதிகமுள்ள, அதாவது 2 லட்சத்தி 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஆந்திர மாநிலத்தில் இதுவரை ஒரு அணு உலை கூட இல்லாதது ஏன்? தமிழகத்தின் பரப்பளவு வெறும் 1 லட்டத்தி 30 ஆயிரம் தான். அதே போல் ஆந்திரா’வின் கடற்கரை பரப்பு சுமார் 1000 கிலோ மீட்டர். அங்கு ஏதாவது கடற்கரை பகுதியில் நிறுவ வேண்டியது தானே!.
இந்திய அரசு எப்போதும் கேரளத்திற்கு சாதகமான நிலையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் மத்திய அரசியலில் உயர் அதிகாரிகளில் 75 விழுக்காட்டினர் கேரளத்துக்காரர்களும், மேற்கு வங்கத்துக்காரர்களும் தான். இதில் மேற்கு வங்கத்துக்காரர்களை விட மலையாளிகளே அதிகம். ஆகையால் மாநிலங்கள் உருவாக்கிய காலம் கொண்டே தமிழர்கள் தங்கள் நிலப்பகுதிகளை வெகுவாக அண்டை மாநிலங்களில் இழக்க நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் அண்டை நாட்டிடனும் இழக்க நேரிட்டது. இது வரை தமிழர்களின் நிலப்பரப்பையும், ரத்தத்தையும் குடித்தது போதாதென்று இன்னும் குடிக்கவும், விழுங்கவும் காத்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான நிலையில் தமிழகத்தில் மொத்த பரப்பளவான 1 லட்சத்தி 30 ஆயிரம் கிலோ மீட்டரும் விழுங்க, என்றென்றும் பீதிக்குள்ளாக்கும் அரக்கானாக, தமிழ்நாட்டின் உயிரோட்டத்தை அடக்க நிற்கிறது இந்த கூடங்குளம் அணு உலை.

Tuesday 8 March, 2011

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:7


அன்பார்ந்த வாசகர்களுக்கு
கடந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் அரசியலை தவிக்கும் எண்ணம் குறித்து குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய நிலைக்கு காரணம் அரசியலின் அருவருப்பு நிலைதான். இருப்பினும் அத்தகைய அருவருக்கத்தக்க நிலை நம்மை அறியாமலேயே நமக்குள்ளும், சுற்றிலுமாக ஆட்கொண்டு விடுவதுதான். சமீபத்தில் இணையத்தில், கடந்த இதழ் தலையங்கம் குறித்து விவாதம் நடந்தேறியுள்ளது. ஒரு மூத்த அறிவு ஜீவி கடுமையாக விமர்சித்துள்ளார். அதே இணையத்தளத்தில் நான் பதில் அளிக்கவும் முனைந்தேன். ஆனால் நேரிடையாக எனக்களிக்கப்படாத விமர்சனம் குறித்து பதிலளிக்க விரும்பாமல் கைவிட்டு விட்டேன். இலக்கியம் மற்றும் கலை தொடர்பாக அனைத்து அம்சங்களும் உலக பொதுமைக்கான ஒன்று. இதில் பிராந்தியம், மொழி என்று பாகுபாடோ இட ஒதுக்கீடோ தேவையற்றது. தமிழ் உட்பட ஏனைய உலக இலக்கியங்களை தீவிரமாக வாசித்து கொண்டிருக்கிறேன். இத்தகைய நிலையில் ஏறத்தாழ பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்களை வாசித்தும் உள்ளேன். எந்நிலையிலும் இவர்கள் என்னை ஈர்க்கவோ, பிரமிப்பில் ஆழ்த்தவோ பெரிதும் இல்லாத நிலைதான். தமிழில் பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதை முற்றிலும் மறுத்தோ அல்லது நிராகரிக்கும் நோக்கமோ எமக்கில்லை. அப்படி அவ்வாறாக பிரம்மிப்பில் இருக்கும் நபர்கள் தங்கள் முனைப்பில் விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டியதுதான். அதுவின்றி செய்படுபவர்களை காயடிக்கும் வேளைகளில் ஈடுபடும் முயற்சியை சற்றும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை. இவ்வாறான மனிதர்கள்தான் பத்தாண்டு முன் வரை நிகழ்ந்த ஆரோக்கியமான பல முயற்சிகளை காயடித்தவர்கள். குறிப்பாக நாகார்ஜூன், சில்வியா என்ற முத்து குமாரசாமி, எஸ். சண்முகம், தமிழவன் போன்றவர்களை தமிழ் இலக்கிய சூழலிருந்து விரட்டியடித்தவர்கள்.
அந்த நபர் குறிப்பட்ட எழுத்தாளர்களின் நாவல்கள் குறித்து அணுகும் போதே அவர் எத்தகைய அறிதல் இலக்கியத்தில் கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. ஒருவரது நாவல் பி.எச். டி தீசிஸ். அதன் லட்சனத்தை அந்த பதிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். அது எவ்வாறு தீசிஸிலிருந்து நாவலானது என்று. மற்றவருடையதை படிக்கவே முடியாதா ஒரு மொழி அமைப்பை கொண்டது. தமிழில் விமர்சிக்க, விவாதிகப்படுவது எவ்வாறு என்று உலகிற்கே தெரியும். இதற்குள் நான் விரிவாக செல்ல விரும்ப வில்லை. இப்படியாக எழுதுவது வேண்டாம் என்று நான் சென்ற இதழில் முடிவெடுத்த வேளையில் இவ்வாறாக எழுத வைத்து காலத்தை விணடிக்க வைத்த அரும்பெருமை அவருக்கே சாரும். தமிழில் இலக்கியம் என்ற பேரில் நிகழ்ந்து வரும் அசிங்கங்களையெல்லாம் வெளிப்படுத்தி கொள்ள எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இது போன்ற அறிவு ஜீவிகள் தங்களது அறிவாற்றல்களை தங்களுக்குள்ளே வைத்து கொண்டும், அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு பங்கிட்டு கொள்ளவும் வேண்டும் என்பதை எனது நிலைப்பாடு. பிறகு ஆகச்சிறந்த தமிழ் படைப்புகளை இத்தாலிய மொழியில் வெளியிடுவார்களா? என கேட்கிறார். அத்தகைய படைப்புகளை அவரது முனைப்பில் பிற மொழியில் வெளியிடுவதை யார் தடுத்தார்கள்? இதோடு நிறுத்தி கொள்வது நல்லது.
சமீபத்தில் கூட இரு பெரும் எழுத்தாளர்களின் மிக சமீபத்திய நாவல்களை வாசிக்க நேர்ந்தது இரண்டுமே படு அபத்தம். அவை குறித்து விரிவாக விமர்சிக்க எண்ணியிருந்தேன். எனினும் விமர்சனமாக எழுதும் அளவுக்குக்கூட ஏதும் எஞ்சப்போதில்லை என்பதால் கை விட நேர்ந்தது. மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவெனெறால் குறிப்பட்ட போக்கு குறித்தும், அதுவும் எனக்கு புலப்பட்ட தளத்தில் இருந்து மட்டுமே இதழின் போக்கு, இது ஒன்றும் அனைவரையும் இழுத்து போட்டு கொண்டு அரசியல் நடத்தும் கூட்டு அரசியல் கட்சியல்ல. இதழின் உள்ளடத்தோடு அணுகும் தன்மை கொண்டவர்கள் மட்டுமே இதழை வாசிக்கட்டும். இது அனைவருக்கும் பொதுவான ஏடல்ல.

-----------ஏப்ரலில் வெளிவருகிறது --------------------------சி

Thursday 6 January, 2011


அன்பார்ந்த வாசகர்களுக்கு
மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்குள் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளேன். பாபர் மசூதி குறித்த கட்ட பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோர முகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்து கொண்டிருக்கும் வரண்ட நதியின் தீராத வேட்கையும், உயிரற்ற பிரதிகளையுடைய ஆளுமைகளும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான தாள்களை முன்க்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும் படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லையென்றால் சற்று பொறுத்திருத்து புத்தக வெளியானதும் உபயோகத்திற்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.
இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீட்டு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பண்ணாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸபெட்ரத்தை கூட இலவசமாகத் தரலாம்.
வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுப்பத்திரிக்கையில் வெளி வருவதற்கான ஆனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகு ஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்து கொண்டும், அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராகிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுப்பத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.
தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையனை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைப்பெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு. நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும்(அருவருப்பான) சாதனையான 2ஜி ஸபெகட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு ப்ரயசத்தத்திற்மாக கூட இதை கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார்.
ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதை புனைய இலக்கிய கூலிகளை தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்து விட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தாங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம் தான் தமிழ் நாடு அடிவருடிகளின் சொர்க்க பூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை சாதகமாக்கி கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.
இலக்கியம் என்பது மொழியை சிலேகித்து எழுத வேண்டிய ஒன்று, அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு. அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் பரந்தபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்கு பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கரை கொண்டு இதுவரை அவர் வீண்டித்த காலங்களுக்கு பிரயாசித்தம் தேடிகொள்ள வேண்டும்.
கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒரு வித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசித்தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமா துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுப்படலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.
மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்து வைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளி வருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில் தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
- பதிப்பாசிரியர்

Wednesday 21 July, 2010

மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


அனுப்புநர்: கலைஞர் தாசன்.
தமிழ் இல்லம்
தமிழ் தெரு,
தமிழுர்.
தமிழ்நாடு. அஇஈஉஊஏ
பெறுநர்: மாண்புமிகு முதல்வர் அவர்கள்
தமிழ் நெஞ்சம்,
தமிழ் கோட்டை
தமிழ்நாடு.அஇஈஉஊஎ.

பொருள்: ஐயா! என்னை தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக

ஐயா!
சூன் மாதம் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டுக்கு வருகைத் தராதவர்கள் தமிழரல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை கண்டு நான் அதிர்ந்து போனேன். நான் மாநாட்டிற்காக புறப்பட்டு சென்னை புறநகர் பேருந்து நிலையம் வந்த வேளையில் இயற்கை கூட தமிழுக்கு எதிரியாக ஆகி போனது. எனக்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டதால் பேருந்து நிலைய கழிப்பறையில் முன்று நான்கு மணி நேரம் கழிக்க நேரிட்டது. பிறகு தவழ்ந்தவாறே இரவு முழுவதும் பயணித்து வீடு வந்து சேர்தேன். வரத் தவறிய அல்லது வர மறுத்த மற்றவர்களை போல் என்னையும் எண்ணி விடாதீர்கள். எனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழ்நாட்டை விட்டு வேறெங்கும் வாழவும் வக்கற்றவன். ஆகையால் மாநாட்டிற்கு வர இயலாததற்கு உடன் நலம் சரியில்லை என்பதைத் தவிற வேறு காரணம் ஏதுமில்லை. ஆகையால் ஐயா, என்னை மன்னித்து, மாநாட்டுக்கு வந்த மற்ற தமிழரைப் போல் என்னையும் ஒரு தமிழர் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
உண்மைத் தமிழன்
கலைஞர் தாசன்

(ஐயா! இந்த வேண்டுதல் கடித்ததுடன் தமிழுக்கு எதிரான சக்திகளைப் பற்றியும், உங்களது அரும் பெருமை பற்றியும் ஒரு நீண்ட கடிதத்தை இணைத்துள்ளேன்)
ஐயா! உங்களது ஆற்றலை அறியாத பேதைகளுக்கு நான் உரைப்பது என்னவென்றால், அவர்கள் பேதைகள் என்பதை விட வேறு என்ன கூற முடியும். தமிழரல்லாத அந்த தமிழ் விரோதிகள் இருந்து என்ன பயன். இந்த தமிழர் அல்லாத பீடைகள் உலகமெங்கும் விரவி கிடக்கிறார்கள். உங்களை வாழ்த்தாத தமிழர் அல்லாத தமிழ் விரோத நாட்டு தலைவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தமிழர் என்ற சந்தேகத்திற்குரிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன தலைவர் ஊ சின்டோ, பிரஞ்சு, இங்கிலாந்து மற்றும் ஏனைய அனைத்து தமிழர் என்று சந்தேகத்திற்குரிய நாட்டு தலைவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.


கி.மு 50000- வது நூற்றாண்டு முன் வாழ்ந்த தமிழ் புலவனின் வழித் தோன்றலான இக்காலக் கவிஞர் உரைத்தது போல் நீர் தான் தமிழ். எந்நாளும் நீ தான் தமிழ் மாமன்னன்.
“தமிழா! தமிழா! நாளை உன் நாளே
தமிழா! தமிழா! நாளும் உன் நாளே!”
என்று பாடிய மகா கவிஞர் தமிழின் உச்சம். உங்களின் மிச்சம். இதைப் போல் உங்களை புகழாத சொச்சம் வெறும் எச்சம். மாநாட்டுக்கு வந்திருந்த உண்மை தமிழர்கள் தமிழே ஆன உங்களை புகழ் பாடினர். அதை கண்டு இங்கு வாழும் ஈனர்களுக்கோ ஆத்திரம். “அனைத்து சாலைகளும் கோவையை நோக்கியே,” என்ற நிலையில் மாநாட்டுக்கு வராமல் இருந்தவர்களை மதுரையில் இன்னும் உள்ள ஆதி கழுமரத்தில் ஏற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இப்படி என்றால், இலங்கையில் வாழ்பவர்களை என்னவென்று கூறுவது. தமிழ் நெஞ்சம் சிவதம்பி தவிற, முள்வேலியில் வசந்த வாழ்வு கொண்டிருக்கும் சந்தேகத்திற்குரிய தமிழர்கள் வரவில்லை. உங்களது மாநாட்டு வர வக்கற்று இறுதிகட்ட போரில் மடிந்து போன தமிழர் அல்லத மற்றும் தமிழரா? என்று சந்தேகத்திற்குரியவர்களையும் நான் கண்டிக்கிறேன். இதை நான் கூறுவதற்கு காரணம், அயராது தமிழுக்காகவே உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு துரோகிகளையும், தமிழ் எதிரிகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி இனங்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு.
ஆகையால் தலைவரே! மாநாட்டுக்கு வந்திருந்த 10 லட்சம்(சுமார்) பேர்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தமிழரே என்பது எனது திண்ணம். குறிப்பாக மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் இந்திய குடியரசுத் தலைவர், மற்றும் தமிழ் இந்திய நிதியமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன்(இவர்கள் பெயர்கள் குறித்து கி.மு.45002-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செக்கோசுலோவிக்கியா தமிழர் என்று சந்தேகமற்ற அறிஞரும், 45001-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் என்று சந்தேகமற்ற உகாண்ட தமிழ் அறிஞரும் அவர்களது பெயர்கள் குறிந்து சந்தேகத்தினால் அந்த சர்ச்சை வேண்டாம் என்று இருவரின் பெயர்களையும் நான் குறிப்பிட வில்லை) .
உலக தமிழர்களின் மக்கள் தொகை
(தமிழர் என்று சந்தேகத்திற்கு உட்படாமல் ): 6,856,600,000 (சுமார்)
தமிழ்நாட்டின் உள்ள தமிழர்களின்
மக்கள் தொகை
(தமிழர்கள் என்று சந்தேகத்திற்கு உட்பட்டு) 66,396,000(சுமார்)
மாநாட்டில் பங்கு கொண்ட
உண்மை தமிழர்கள் 1,000,000(சுமார்)+1
கடுமையான உடல் நிலை பாதிப்பினால்
மாநாட்டிற்கு வரத் தவரிய தமிழர்
(உங்கள் அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) 1

ஆக மொத்தம் உலகில் உள்ள சந்தேகத்திற்கு
இடமின்றி தமிழர்கள் : 1,000,001(சந்தேகத்திற்கு
இடமின்றி நிதர்சனம்)

தலைவா நான் மாநாட்டுக்கு வர இயலவில்லை என்றாலும் உம்மை பற்றி நான் புகழுறை அளிக்காவிட்டால் எனது பிறவிக் கடன் தீராது.
தலைவா! இந்த கவிமழை:
இதோ புடிச்சிக்கோ:
தமிழ் மன்னவா
நீ சாணக்கியனான தமிழன்
தமிழின் கனி
மொழியில் செம்மொழி

தலைவா நீ
தேசத்தை பாதுகாத்த
தேச பாதுகாப்பு சட்டம்.

தலைவா நீ
சீனர்களுக்கு மாவோஸ்ட்
சிகரத்தில் எவரஸ்ட்
போயஸ் கார்டனுக்கு நீ டேரர்ரிஸ்ட்,

தலைவா நீ
மகா கவி
உனக்கு அளிக்கப்படாத
நோபல் பரிசு,
இனி நோபல் பரிசு
எவருக்கும் அளிக்காது
நோ பீஸ்(அமைதி).

இலங்கையில் புலியாம்
இங்கே பகையாளியாம்
நம் பெண் சிங்கம்
சோனியா இருக்கையில்
ஏன் பீதியாம்?

உலகில் ராஜாவாம் உயரியம்
2-ஜி ஸ்பெட்ரம்
இனி தமிழன் தான்
முதல் தரம்.

தலைவா நீ, தமிழ் அங்காடி
உனக்கு போட்டியா
ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி.

தலைவா! இன்னும் நிறைய எழுத என் நெஞ்சம் கொள்ள கொள்கிறது. எனினும் கவிஞர் வாலி அவர்கள் இதை விட அழகாக இன்னும் புகழ் பாடுவார் என்பதால் இந்த பொடியன் விழகிக் கொள்கிறேன்.
உலகில் உள்ள 600 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின்(சந்தேகத்திற்கு இடமின்றி, கி.மு. 70000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த எகிப்திய அரசரும் தமிழர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத ஆராய்ச்சி குறிப்பிடுவதால்) ஒரே தலைவன் நீர் தான். உமது பெருமை குறித்து நமக்கு புதிதாக கிடைத்த செப்பு பட்டையத்தை ஆய்தல் வேண்டும். இந்த மாநாட்டிற்கு எதிராக தமிழரல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் இலங்கையில் தமிழர் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்களாம். நான் கேட்கிறேன்.
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. என்றாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக மணமேடையில் இருந்து புறப்பட்டு வந்தார்களா?. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறார்களா? அல்லது, பாளையம் கோட்டை சிறையில் பாம்புகள் மத்தியில் சிறைப்பட்டிருக்கிறார்கள், அல்லது உங்களுக்கு மாமானா, மச்சானா அவர்கள், மானங்கெட்டவர்கள். இப்படி எதும் செய்யாதவர்களை எப்படி தமிழர்கள் என்று ஏற்க வேண்டும். குறைந்த பட்சம் தி.மு.க. வுக்கு ஓட்டாவது அளித்திருக்கிறார்களா? அல்லது கடந்த ஆட்சியல் ஒரு நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது அதிர்ச்சியில் இறந்து போன பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலராவது இவர்களா? ஆகையால் இவர்கள் தமிழர் ரத்தம் இல்லை என்பது புலனாகிறது. இப்படியான நிலையில் உங்களது புகழை கண்டே இவர்கள் இவ்வாறு கூக்குரலிடுகிறார்கள்.
அதே போல் செம்மொழியாக நம் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றதற்கு ஏதோ தமிழ் மொழியின் சிறப்பு என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் செம்மொழி குறித்து வேறு பல அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு முன்னரே கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்கள். அவர்களை யார் தமிழ் செம்மொழி ஆவதற்கு முன்னரே கோரிக்கை விடுக்கச் சொன்னது. ஐயா, நீங்கள் தான் தமிழ். அது எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழ் சிறப்பனாது என்று கருத்து தெரிவிக்க முடியும். ஆகையால் அவர்களும் சந்தேகத்திற்கு உரிய தமிழர்களே!
அதே போல் மாநாட்டுக்கு வந்த தமிழர்கள் மிகுதியாக மது அருந்தியதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் விற்கப்பபடும் மதுவை தமிழர் அருந்தாமல் வேறு யாரை அருந்த அனுமதிக்க முடியும். அண்டை மாநிலங்கள் நமக்கு நீர் தராமல் தடுக்கையில் நாம் ஏன் மற்ற மாநிலத்தார்களுக்கு மது கொடுக்க வேண்டும். ஆகையால் தமிழரே அருந்த வேண்டும். அதே போல் மாநாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான தமிழ் குடிகள், திராவிட குடிகள் என்பதை வலிமையுடன் கூறி கொள்ள கடமை பெற்றுள்ளேன்.
அதே போல் தாங்கள் எழுதிய மாநாட்டு பாடலை சிலர் குறை கூறுகிறார்கள். நீங்கள் இப்படலை எழுதியதற்காக, கவிப்பேரசர் வைரமுத்துவைப் போல் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையா கோரவாப் போகிறீர்கள்? அல்லது விற்பனை உரிமையாத்தான் கோரப்போகிறீர்கள்? இலவசமா செய்தது தானே. தமிழனுக்காக வீட்டை தந்தீர்கள், உங்கள் மக்களை தந்தீர்கள், உங்கள் ஆற்றலை தந்தீர்கள், உங்கள் தமிழை தந்தீர்கள், அதே போல் தான் பாடலையும் தந்தீர்கள். தமிழ் இந்திய குடியரசுத் தலைவி பொருள் உணர்ந்து அப்படலை புகழ்ந்தாரே, அதுக் கூடவா இவர்களுக்கு புரியவில்லை.
தஞ்சையில் நடந்த கடந்த தமிழ் மாநாட்டின் போது “ தமிழ் இங்கிருக்க அங்கே ஏன் வீணாக மாநாடு,” என்று அன்று குமுறிய உலக மகா கவிஞர் அப்துல் ரகுமான். இன்று தமிழுக்காக இப்படியான மாநாட்டில் தனது பிறவிப்பயனை அடைந்து விட்டார். உலகத் தமிழர்களின் தலைவர் நீங்கள் என்கிறார் சிவத்தம்பி. நாளை ராஜ பக்ஷே அழைத்தால் கூட அந்த பட்டத்தை திருப்பி போட்டு விடுவார். இப்படியாக தமிழாக விழங்கும் ஐயா! கலைஞர் அவர்களே! உங்கள் ஆற்றலை பல்லாயிரம் பக்கங்கள் நீட்டிக் கொண்டே போகலாம். இருப்பினும் இதை மறுக்கும் ஈனர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மனம் நொந்து போகிறது.
தலைவரே! இப்படியாக நான் கூறுவதன் மூலம் தமிழர் அல்லாத கொசுக்கள் கடிக்கக்கூடும், தமிழர் அல்லாத ஈக்கள் மொய்க்கக்கூடம், தமிழரல்லாத ரவுடிகள் எனது வாயிலேயே குத்தக்கூடும், இருப்பினும் உங்களது கொடையின் கீழ் வாழும் சாதாரண தமிழன்(அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) என்பதலும், உங்களது பாதுகாப்பு இருப்பதாலும் நான் தைரியமாக இதை எழுதுகிறேன்.

Sunday 16 May, 2010

கிம் கி டுக் நேர்காணல்


இழிந்தவன் திரைப்படம் குறித்து கிம் கி டுக் அளித்த நேர்காணல்: பகுதி: 1

கேள்வி: நீங்களே ஒரு முறை கூறியிருக்கிறீர்கள் உங்களது படங்கள் “வெறுப்பு” என்ற நிலையிலிருந்து தான் தொடங்குகிறது என்று. இப்போது உங்களது புதிய படமான இழிந்தவன்-ல் எத்தகைய அணுமுறையை கையாண்டிருக்கிறீர்கள்?

கிம் கி-டுக்: “வெறுப்பு” என்ற வார்த்தையை நான் பலமுறை பயன்படுத்திருக்கிறேன் என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் அந்த வார்த்தையை உள்ளடத்தைத் தாண்டி நினைத்து விடுவீர்கள் என்று நான் எண்ண வில்லை. நான் கூறும் “வெறுப்பு” குறிப்பிட்ட ஒன்றை பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ அல்லது ஒரு தனி நபர் பற்றியோ அல்ல. நான் கூறும் “வெறுப்பு” எனது வாழ்க்கையில் கிடைத்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து பெற்றது. அதன் முலம் நான் கண்டுணர்ந்ததை திரைப்படமாக எடுக்கிறேன். சில சமயங்களில் எனக்கு புலப்படாதவைகளை ஈடுகட்டுவதற்காக படங்களை எடுக்கிறேன். ஆகையால் “வெறுப்பு” என்று கூறுவதை காட்டிலும் “புரிந்து கொள்ளாமை” என்றே பேசலாம்.

கேள்வி: இழிந்தவன் படத்தின் மூலம் தாங்கள் இந்த உலகத்தில் எத்தகையதை கண்டறிய முயன்றுள்ளீர்கள்டீர்கள்?

கிம் கி-டுக்: எனக்குள்ளே தொனித்து கொண்டிருக்கும் கேள்வி என்னவென்றால், ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒரே அந்தஸ்த்துடன் ஏற்றத் தாழ்வு ஏதும் இன்றி பிறக்கிறோம். ஆனால் வளர்ந்ததும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகி நிலைக்கு தகுந்தவாறு வகைப்படுத்தி தரம் பிரித்து பார்க்கிறோம். நாம் ஒருவரை உருவத்தையும் தோற்றத்தையும் கொண்டு ஏன் மதிப்பட வேண்டும்? நம்மிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ எதற்காக ஒருவரை பணத்தை கொண்டு ஏன் முக்கியத்துவம் தருகிறோம்? அத்தகையவர் அழகுடனோ அல்லது அவலட்சணத்தோடு இருந்தாலும் நாம் பொருட்படுவதில்லை. இத்தகைய தகுதி வரையறை நமது பிறப்புக்குப் பின் திணிக்கப்பட்டதாகும். இதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதனால் ஒருவரோடு மற்றொருவர் இணைந்து வாழ வகை வழியின்றி போகிறது. இதனால் நான் கேட்பதெல்லாம் இத்தகைய ஏற்றத் தாழ்வுடைய சமூக அடுக்குகள் உலகத்தோடு கலந்து வேறுபாடின்றி இருக்க வாய்ப்பில்லையா என்று தான்.

கேள்வி:
இந்த கேள்விக்கு பதிலை கண்டுப்பிடித்து விட்டீர்களா?

கிம் கி-டுக்: நான் கேட்பதெல்லாம் மனிதர்களை ஒருவர் மற்றொருவரை மதிக்க வேண்டும் என்பதே, தோற்றம் கொண்டோ அல்லது பணத்தினாலோ அல்லது வகுப்பு போதத்தினாலோ துவேஷம் செய்ய கூடாது. அது தான் எனது பதிலும் கூட. அத்தகையதைத் தான் பார்வையாளர்களிடம் முன்னிலைப்படுத்துகிறேன். எனது கேள்வியை அவர்களிடமே வைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற் போல் விடையை கண்டுப்பிடித்து விடுவார்கள்.

கேள்வி:
தற்போதைய படமான இழிந்தவன்(Bad Guy)- னில் முக்கிய கதாபாத்திரமான ஹாங்-ஜி ஒரு காமத் தரகன். விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கவர்ந்து செல்பவன். அவனது மொழி மௌனம். எந்த விதத்திலும் தனது உணர்வை வெளிக்காட்ட இயலாதவனாவும், தனது ஒரே மொழி வன்செயல் என்பதாகவும் உள்ளான். அவனது மௌனத்திற்கு காரணம் தான் என்ன?


மந்திரச்சிமிழ் இதழில்.......

Wednesday 14 April, 2010

ஃபெத்திக் அக்கின்


ஃபெத்திக் அக்கின்- இருவேறு தேசங்களிலிருந்து......


“திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கேளிக்கையை
புகுத்தும் பட்சத்தில் அது நாடகத்தன்மையை அடைகிறது
ஏனெனில் பார்வையாளர்களை அது சிரிக்க வைக்கும்.
அது ஏதோவொரு வகையில் அவர்களின் ஆன்மாவை
விழிக்கச் செய்கிறது. அவ்வாறு அவர்களின் ஆன்மாவை மீட்சிக்கொள்ள செய்வதை விட அவர்களை கத்தியால்
குத்துவதே மேல்”.
-ஃபெத்திக் அக்கின்-


காலகட்டங்கள் மாறுகின்றன. புது வகை கதைசொல்லல் சினிமாவிலும் அவசியமாகிறது. துருக்கியில் விட்டுச் சென்ற தனது சிறகுகளை கேமராக் கண்களின் வாயிலாக தேடும் ஃபெத்திக் அக்கின் 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஹாம்பெர்கில் துருக்கிய இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு மகனாக பிறந்தார். ஹாம்பெர்க் கல்லூரியில் காட்சி வழி தகவல் தொடர்பியல் (Visual Comunication) பயின்று கொண்டிருக்கையில் 1995 ஆம் ஆண்டு sensin என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். அந்த குறும்படம் மிகுந்த பாராட்டைப்பெற்றதோடு அல்லாமல் ஹாம்பெர்க் சர்வதேச குறும்பட விழாவிலும் பரிசுபெற்றது. அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் கீமீமீபீ என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். ஃபெய்த் அக்கிம்’மின் முதல் முழுநீள திரைப்படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி 1998ல் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு சிறந்த இளம் இயக்குநருக்கான வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஜெர்மானிய மெக்ஸக்கோ நடிகையான மாணிக் ஓபர்முல்லர்’ரை 2004 ஆம் ஆண்டு மணந்துகொண்டார் ஃபெய்த் அக்கின்.
ஃபெத்திக் அக்கினுக்கு சினிமா கலைஞனாக மட்டுமின்றி துணிச்சலான அரசியல் நோக்கமும் கொண்டவர். அவருடைய சில செயல்பாடுகள் சர்ச்சைகளைக்கூட உருவாக்கின. ஜெர்மனியில் நாசிகள் மேற்கொண்ட யூத இன பேரழிப்பான ஹாலோகாஸ்ட்’டை சிறுமைப்படுத்தியதற்காகவும், அவர் அணிந்திருந்த டி-ஷேர்ட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் (ஙிusலீ) பெயரில் உள்ள “s” என்ற எழுத்துக்குப் பதிலாக நாசிகளின் ஸ்வத்திக் குறியை இட்டதற்காகவும் ஜெர்மன் போலீசார் அவர்மீது விசாணையை மேற்கொண்டனர். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில் “நான் இவ்வாறு ஸ்வத்திக் குறியிட்டது ஆத்திரமூட்டுவதற்காக அல்ல. புஷ்’ஷின் கொள்கை ஹிட்லரின் ஆட்சியைப்போலிருப்பதை வலியுறுத்தத்தவே. புஷ்’ஷின் ஆட்சியில் ஹாலிவுட்டு கூட பென்டகனின் கைப்பாவையாக மாறியுள்ளது. கவுன்டமாலா சிறை சித்ரவதைகளை இயல்பான சம்பவங்களைப்போல் ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன. புஷ்’ஷின் அரசாட்சி மூன்றாம் உலக போருக்கு உலகத்தை இட்டுச் செல்லக் கூடும் என்பதை வலியுறுத்தத்தான் நான் அவ்வாறு செய்தேன்,” என்று குறிப்பட்ட அக்கின், “புஷ் ஒரு பாசிஸ்ட் என்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.
தனது முஸ்லிம் என்ற அடையாளத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஃபெத்திக் அக்கின் வெளிப்படுத்த தயங்க வில்லை. கடந்த நவம்பர் 2009 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசு இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மீனோரேட்ஸ்(விவீஸீணீக்ஷீமீt)'ல் உள்ள கட்டடக் கலைக்கு தடைவிதிக்க பொது வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்கெடுப்பு அமோக ஆதரவுடன் வெற்றிப் பெற்றது. அதற்கு தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்ட ஃபெத்திக் அக்கின், “ இத்தகைய பொது வாக்கெடுப்பு மனிதாபிமானமும், சகிப்புத் தன்மையும் அற்றது. வேற்று கலாச்சார, மதம், இனம் கொண்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன். அதேவேளையில், இஸ்லாமியப் பெற்றோருக்கு மகனாக பிறந்த என்னால் மீனோரேட்ஸ்’ஸை இஸ்லாமிய மத அரசியலின் அடையாளமாக பார்க்க முடியவில்லை" என்றார். மீனோரேட்ஸ்’ஸை வழிப்பாட்டுக்குரிய கட்டடமாகவே தான் கருதுவதாகவும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் செயல் தன்னை பாதித்திருப்பாகவும் தெரிவித்த அவர் இனிமேல் சுவிட்சர்லாந்து செல்லப் போவதில்லை என்றும், தனது சமீபத்திய படமான ஜிலீமீ ஷிஷீuறீ ரிவீtநீலீமீஸீ யை அந்நாட்டில் திரையிடப்போவதில்லை என்றும் தெரிவித்ததோடு, இஸ்லாமியர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் சேமித்திருக்கும் பணம் முழுவதையும் உடனே திரும்ப பெறவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது திரைப்படங்கள் அனைத்தும் துருக்கியின் கலாச்சாரப் பின்னணியுடன் படமெடுக்கப்பட்டன. குறிப்பாக ஜெர்மனில் வாழும் இளைஞர்கள் அனுபவிக்கும் இனவாத பிரச்சனைகளைப் பற்றியவை. அவரது முதல் படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி ல் வரும் கேப்ரியல் என்ற துருக்கிய இளைஞன், பாபி என்ற செர்பிய இளைஞன், கோஸ்டா என்ற கிரேக்க இளைஞன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் குழுவாக ஹாம்பெர்க் அருகே உள்ள மாவட்டத்தில் களவு போன்ற சிற்சில குற்றங்களை செய்து வருபவர்கள். அவரது முக்கிய திரைப்படமான சொர்க்கத்தின் விளிம்பு(ஜிலீமீ ணிபீரீமீ ளியீ ஜிலீமீ பிமீணீஸ்மீஸீ) இரு நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு படமெடுக்கப்பட்டதாகும். அப்படத்தில் துருக்கிய குடியேறிகள் அதிகமாக உள்ள ஜெர்மனில் ஃப்ரிமென் நகரத்தில் கதையின் முதல் பகுதி தொடங்குகிறது. மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அலி கூட ஒரு ஜெர்மன் வாழ் துருக்கியர் தான். தனது தனிமையை தனிக்க விபச்சாரிகள் வீதிக்குள் இறங்கி நடக்கிறார். எஸ்டெர் என்ற விபச்சாரியை அடைகிறார். அவர்களது தொடர்பு தொடர்கின்றது. இதனிடைய துருக்கிய இளைஞர்குழு, அவள் ஒரு துருக்கியர் என்பதை உணர்ந்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தும் படி வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் அவள் தனது விபச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒருமுறை எஸ்தெரை தன்னோடு வந்து வசிக்கும்படி அழைக்கிறார் அலி. தான் ஒண்டியாக இருப்பதாகவும் தனக்கென்று ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர். இந்த விபச்சாரம் மூலமாக அவளுக்கு கிடைக்கும் தொகைக்கு ஈடான தொகையை தனது ஓய்வூதியத்திலிருந்து தருவதாகவும் கூறுகிறார். அதை மறுத்து விடுகிறாள் எஸ்தெர். இருப்பினும் தனது செல் எண்ணை தந்துவிட்டுச் செல்கிறார் அலி. பிறகு துருக்கிய இளைஞர்களின் மிரட்டலால் அலியை தேடி வருகிறாள் எஸ்டெர். அப்போது அலி குதிரைப் பந்தய அரங்கில் அமர்ந்து மது அருந்திகொண்டிருக்கிறார். “நீங்கள் அன்று கூறியது நிஜமானது தானா?” என்கிறாள் எஸ்டெர்.
“ஆம், உனக்கு மாதம் எவ்வளவு கிடைக்கிறது?” என்கிறார் அலி.
அவளோ, அந்த நாட்டின் ரூபாயின்படி 3000 ஆயிரம் என்கிறாள். நான் போதுமான அளவு ஓய்வூதியம் வாங்குகிறேன். அதனோடு வங்கியிலும் பணம் வைத்துள்ளேன். நிலமும், சில சொத்துகளும் வைத்துள்ளேன். பணநெருக்கடி ஏற்பட்டால், பேராசியராக இருக்கும் எனது மகனிடம் வாங்கி கொள்ளலாம். அவன் நன்றாக சம்பாதிக்கிறான். அவன் நல்லவன்உதவுவான் என்கிறார்.
ஒரு நாள் அலியும் அவரது மகன் நிஜாத்'தும் எஸ்டெரோடு இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அலி அதிகமாக மது அருந்தி விடுகிறார். அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வருகிறான் நிஜாத். அதன் பிறகு எஸ்டெரோடு உரையாடுகிறான் நிஜாத்.
“எனது தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவளிடம் கேட்கிறான்.
“அவர் என்னிடம் வருவார்” என்று எதார்த்தமாகவே எஸ்டெர் கூறுகிறாள்.
“அப்படியென்றால்...”
“உங்களிடம் ஏதும் கூறவில்லையா உங்கள் தந்தை”“இல்லை”
“நான் அனைவரையும் எளிதில் அணுகி இன்பம் தருபவள்”
“அப்படியென்றால்,”“ஆம், நான் ஒரு விபச்சாரி”
அப்போது எஸ்டெரை அலி அழைக்கிறார். அவள் செல்கிறாள். சிறிது நேரத்திற்கெல்லாம் நிஜாத் என்று எஸ்தெர் கூக்குரலிடுகிறாள். அலி படுக்கையில் மூர்ச்சை ஆகி கிடக்கிறார். அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
உடல் தேர்ந்து வீட்டிற்கு வரும் அலி, எஸ்டெரை உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறார். அவள் மறுக்கிறாள். கன்னத்தில் அறைகையில் மயங்கி விழும் எஸ்தெர், இறந்து விடுகிறாள். அலி கதறுகிறார். துருக்கியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளுக்காக விபச்சாரம் செய்து கொண்டிருந்த எஸ்டெரின் கதை முடிவடைகிறது. முன்னதாக தனது கதையை நிஜாத்திடம் கூறிய எஸ்டெர், தான் ஒரு விபச்சாரி என்று மகளுக்கு தெரியாது என்றும், அவளிடம் தான் ஒரு செருப்புக்கடையில் பணிபுரிவதாக கூறியிருப்பதாகவும் நிஜாத்திடம் கூறியிருந்தாள். அவளை படிக்கவைப்பதுதான் தனது நோக்கமென்று கூறியிருந்தாள்.
அடுத்தக் கட்டமாக படம் துருக்கியை நோக்கி நகர்கிறது. எஸ்டெரின் உயிரற்ற உடல் துருக்கிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உறவினர்களோடு சேர்ந்து நிஜாத்தும் அவளது உடலை நல்லடக்கம் செய்கிறார். எஸ்டெரின் மகளான ஆய்டென் பற்றிய விவரங்கள் அவளது உறவினர்களுக்கே தெரியாத நிலை. பல மாதங்களுக்கு முன்னரே அவள் தங்களிடமிருந்து தொடர்பை இழந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளது குடும்ப புகைப்பட ஆல்பம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதில் கூட அவளது சமீபத்திய புகைப்படம் ஏதும் இல்லை. அவளது சிறு வயது படங்கள் மட்டுமே உள்ளன. ஆல்பத்தில் உள்ள அவளது தாய் எஸ்டெரின் புகைப்படம் ஒன்றை தன்வசம் எடுத்துக்கொள்கிறான் நிஜாத்.
ஆய்டெனை தேடும் படலத்தைத் தொடர்கிறான் நிஜாத். இதனிடையே படத்தின் அடுத்த கட்டம் லாட்ஸ்’ஸின் மரணம் என்ற பகுதிக்குள் செல்கிறது. இருவேறு கதைகள். தேடுதல் என்ற அம்சம் பிரதானமாகிறது. படத்தின் போக்கு என்பது குறுக்கு வெட்டாக ஒரு நிகழ்வு ஜெர்மனியிலும் மற்றொரு நிகழ்வு துருக்கியிலுமாக மாறி மாறி தேடுதல் என்ற ஒன்றோடு சம்பவங்கள் கோர்க்கப்படுகிறது. “லாட்டி’யின் மரணம்,” பகுதியின் தொடக்கத்தில் பெரும் திரளான மக்கள் பேரணி காண்பிக்கப்படுகிறது. துருக்கியின் குர்திஷ் இனத் தலைவரான ஓக்லேன் தலைமையிலான இடது சாரி உழைக்கும் மக்கள் கட்சியின் பேரணி வருகிறது. ஆய்டென் அக்கட்சியின் உறுப்பினர். பேரணியில் நடக்கும் சலசலப்புகளில் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறி விழ அதை பற்றிகொண்டு அவள் ஓடுகிறாள். அப்போது அவளது செல்பேசியைத் தவற விட்டுகிறாள். தான் எடுத்து வந்த துப்பாக்கியை ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் புகைக்கூண்டில் போட்டு விடுகிறாள். இதனிடையே ஆய்டேன் தங்கியிருக்கும் இடத்தை போலீசார் சோதனையிட்டு அவளது அறைத்தோழிகளை கைது செய்கிறார்கள். இனி துருக்கியில் ஆய்டெனால் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை. ஆகையால் “குல் கொர்க்கமாஸ்” என்ற போலியான பெயர் கொண்ட பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் நாட்டிற்கு வருகிறாள். இடதுசாரி குர்து இன முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அவளை அழைத்துப் போகிறார்கள். நாளைக்கு தருவதாக கூறி அவர்களிடம் செலவுக்கு 100 யூரோ கேட்கிறாள். தனது செல்பேசி தொலைந்ததால் தனது தாய் எஸ்டெரின் தொடர்பை அவள் இழந்துவிடுகிறாள். ஃப்ரிமென் நகரத்தில் உள்ள செருப்புக் கடைகளிலெல்லாம் தனது தாயைப்பற்றி விசாரிக்கிறாள். ஆனால் சாதகமான பதில்களெதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. இதனிடையே வாங்கிய பணத்திற்காக தனது ஹோட்டலில் வைட்டராக பணிபுரிமாறு கூறுகிறான் அந்த இடதுசாரி நண்பன். அவள் மறுக்கவே அங்கிருந்து விரட்டப்படுகிறாள் ஆய்டென்.
தெருக்களிலும் சாலையோரங்களிலும், ஏன் ஒரு முறை நிஜாத் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் அரங்கத்திலும் கூட அவள் படுத்துறங்குகிறாள். ஒரு நாள் வீதியில் லாட்ஸ்’ஸை சந்திக்கிறாள். அவளிடம் தனக்கு உதவும்படி கோருகிறாள். இப்படியாக அவர்கள் இருவருக்கிடையே நட்பு அரும்புகிறது. இருவரின் நட்பு லெஸ்பியன் உறவாக மாறுகிறது. லாட்ஸ்’ஸின் தாய்க்கு ஆய்டெனின் வருகை ஆரம்பத்திலிருந்தே பிடிக்க வில்லை. ஒரு நாள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வாக்குவாதத்தில் முடிகிறது. ஆய்டென் வெளியேறுகிறாள். வீட்டிலிருந்து கீழிறங்கி உட்கார்ந்து அழுகிறாள். அப்போது லாட்ஸ் வருகிறாள். ஆய்டென் அருகே அமர்கிறாள். “எனது தாயை கண்டுபிடிக்க உதவுவாயா,” என்று கதறுகிறாள் அவள். இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள். தேடுதல் தொடர்கிறது. திரைப்படத்தின் இந்த கட்டத்தில் தான் இயக்குநர் தனது திரைக்கதை உத்தியை பிரதானமான ஒன்றாக அமைக்கிறார். ஜெர்மானியப் பெண்ணான லாட்டி’யின் அகால மரணப்பகுதி என்பது எஸ்டெரின் மரணத்திற்கு முன் நடக்கிறது. நிஜாத் பயிற்றுவிக்கும் அரங்கில் ஆய்டென் உறங்குவதும், தனது தோழி லாட்டியுடன் சேர்ந்து எஸ்தெரைத் தேடும் போது நிஜாத்தும் எஸ்டெரும் பேருந்தில் ஆய்டெனைக் கடந்து பயணித்து செல்வதுமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். திரைக்கதை சொல்வதில் இது தான் நான்- லீனியர் பாணி. நேர்கோடற்று திரைக்கதை நகர்கிறது.
எஸ்தெரைத் தேடுதல் படலத்தின் இடையே, இரவுவேளையில் போலீசாரால் அவர்களது கார் நிறுத்தப்படுகிறது. சோதனையில் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது ஆய்டென் தப்பித்து ஓட முயற்சித்து பிடிபடுகிறாள். அப்போது ‘அடைக்கலம் , அடைக்கலம்,’ என்று கத்துகிறாள். அவளைப் பிடித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். ஆய்டெனின் அடைக்கலம் கோரும் தாக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது: எவரொருவர் மதம், இனம், தேசியம், சமூக, அரசியல் ஆகியவை தொடர்பாக தங்களது சுதந்திரத்திற்கும், ஆன்மாவுக்கும் எதிரான சூழ்நிலையோ அல்லது ஒடுக்குமுறையோ அல்லது அவர்களின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ பாதகம் ஏற்படும்பட்சத்தில்தான் அடைக்கலம் தரப்படும்.
ஆய்டென் துருக்கிக்கு மீண்டும் அனுப்பப்படுகிறாள். துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்டெனை காப்பாற்ற லாட்டியும் துருக்கி புறப்படுகிறாள். அவளது தாய் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அதைமீறி அவள் புறப்படுகிறாள். திரைப்படத்தின் அடுத்த நகர்வு துருக்கியிலிருந்து தொடர்கிறது. அங்கு ஆய்டெனை சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய பயங்கரவாதக் குழுவுடன் ஆய்டென் தொடர்பு வைத்திருந்ததாக அவள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது............
...................
................
மந்திரச்சிமிழ் இதழ்-2-ல்

Sunday 4 April, 2010

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:2 & 3




அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து
முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.

செல் : 9894931312