Saturday 18 July, 2009

உருப்பிறழ்வுகள்


சாலை இரைச்சலில்
எல்லையற்ற பெருவெளி

காற்றை நொடித்து
உலாவித் திரிந்தான்
ஆதி மனிதன்.

அதன் பெருவெளி சங்கேதங்களின்
ஊடாகப் பயணித்தான்
ஒரு குட்டி பிரயாணி
.
பிரக்ஞைகள் தோறும்
நகையாடின ஸ்தூலங்கள்
.
நகர்வுகள் கேள்விக்குளாகின.

அசைவற்றுப்போயின
உருப்பிறழ்வுகள்.
அதிலிருந்து பிறழ்ந்த கடல்
கரையேறித் தொடர,
கரையோரத்தில் நாய்களின் ஓலம்
கௌடில்யர்களும் அதனோடு
சேர்ந்துகொண்டனர்.

காட்டை சதுரங்கமாக்கி விளையாடினாள்
பூவிலிருந்து பிறழ்ந்த சிறுமி ஒருத்தி.
மழைகேசத்திலிருந்து பிரிந்த

ஒரு மயிர்த்துளி

அவள் மீது குடையாய் படர

காட்டின் எஞ்சிய
மருக்கள் சலசலத்தன.

2 comments:

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!