Monday 22 June, 2009
மழையடிக்கும்..
மழையடிக்கும்...
மெதுவாய் புறம் நாடி
தூவானம் மேல் சரியும்
சரீரத்தை மீட்டெடுக்க
முடியாதபடி மழை.
ஓரங்கசியும் தாழ்வாரம்,
காற்றில் வீசும் கொடி
இவைகளைப் போல் தான்
மழையில் நனைவதும்.
என்றாவது மழைக்காக
விடுமுறை வேண்டி ஏக்கத்தில்
இருக்கும் போது
வராமல் போகும் போது....
......................
......................
மழையடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment